ஷானா.. மெலீசா! எம்.ஜி.ஆர். படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய அங்கத்து என்பவரின் மகன் சண்முகம் தயாரித்து, இயக்கும் ஓ..நெஞ்சே படத்தில் பல குளு குளு காட்சிகளை ஏகமாக சேர்த்து விட்டிருக்கிறார்களாம். அப்பா, அம்மா யாராவது சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் இருந்து விட்டால் போதும், உடனே அவர்களது வாரிசுகளும் அதே துறையில் படு வேகமாக இறங்கி விடுகிறார்கள். அப்படி குதித்துள்ளவர்தான் சண்முகம். இவரது தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகும் ஓ.. நெஞ்சே அக்மார்க் காதல் கதை என்பதை நாம் போன வாரத்தில் சொன்னோம். காதல் இருந்தால், கோலிவுட் தர்மப்படி, கூடவே காமமும் வந்து போக வேண்டும் அல்லவா. அதை ரொம்ப நிறைவாகவே செய்திருக்கிறாராம் சண்முகம். சில டெலி பிலிம்களை இயக்கிய அனுபவம் கொண்ட சண்முகம், கண்களால் காதல் செய் நாயகன் வசீகரனை ஹீரோவாகவும், சுபா புஞ்சாவை ஹீரோயினாகவும் போட்டு எடுக்கும் படம் இது. முதல் படத்தில் வசீகரிக்காத வசீகரன், இப்படத்தில் பேசப்படுவாராம். வசீகரனுக்கு ஜோடியாக சுபா புஞ்சா, கிளாமரில் கிண்டி கிழங்கெடுத்து வருகிறார். இந்த மச்சி நாயகி இதில் சொக்கிப் போக வைக்கும் அளவுக்கு கிக்கை ஏற்றி நடித்துள்ளாராம். சுபாவின் கவர்ச்சி மட்டும் போதுமா என்று யோசித்துப் பார்த்த சண்முகம், சட்டுப் புட்டென்று மும்பையிலிருந்து இரண்டு குஜிலிகளைக் கூப்பிட்டு வந்து குளு குளு குத்தாட்டம் போட வைத்திருக்கிறார். மெலீசா, ஷானா கான் ஆகியோர்தான் அந்த மும்பை முயல்கள். சும்மா சொல்லக்கூடாதுங்காணும்!, ரெண்டு புள்ளைகளும் பூந்து வெள்ளாடிருக்கிறாக்கங்களாம். இதில் மெலீசாவுக்கு தமிழ் புதிதல்ல. சானாவுக்கே கோலிவுட் புச்சு.. இந்த கவர்ச்சிப் பந்துகளின் துள்ளல் ஆட்டம், ரசிகர்களின் நெஞ்சை கும்மியடிக்க வைக்கும் என்று உறுதியாக கூறுகிறார் சண்முகம். இருவரும் ஆடியுள்ள குத்துப் பாட்டு ரசிகர்களை உட்கார வைக்காமல் உந்தித் தள்ளுமாம், அந்த அளவுக்கு மந்தியாட்டம் போட்டிருக்கிறார்களாம் இரு மும்பை அழகிகளும். சுபா புஞ்சா, மெலீசா, ஷானா கான் என முப்பெரும் குஜிலிகளுடன் உருவாகும் ஓ..நெஞ்சே, ரசிகர்களின் நெஞ்சை நசுக்கப் போவது உறுதி!

By Staff

எம்.ஜி.ஆர். படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றிய அங்கத்து என்பவரின் மகன் சண்முகம் தயாரித்து, இயக்கும் ஓ..நெஞ்சே படத்தில் பல குளு குளு காட்சிகளை ஏகமாக சேர்த்து விட்டிருக்கிறார்களாம்.

அப்பா, அம்மா யாராவது சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் இருந்து விட்டால் போதும், உடனே அவர்களது வாரிசுகளும் அதே துறையில் படு வேகமாக இறங்கி விடுகிறார்கள். அப்படி குதித்துள்ளவர்தான் சண்முகம்.

இவரது தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகும் ஓ.. நெஞ்சே அக்மார்க் காதல் கதை என்பதை நாம் போன வாரத்தில் சொன்னோம்.

காதல் இருந்தால், கோலிவுட் தர்மப்படி, கூடவே காமமும் வந்து போக வேண்டும் அல்லவா. அதை ரொம்ப நிறைவாகவே செய்திருக்கிறாராம் சண்முகம்.


சில டெலி பிலிம்களை இயக்கிய அனுபவம் கொண்ட சண்முகம், கண்களால் காதல் செய் நாயகன் வசீகரனை ஹீரோவாகவும், சுபா புஞ்சாவை ஹீரோயினாகவும் போட்டு எடுக்கும் படம் இது.

முதல் படத்தில் வசீகரிக்காத வசீகரன், இப்படத்தில் பேசப்படுவாராம்.

வசீகரனுக்கு ஜோடியாக சுபா புஞ்சா, கிளாமரில் கிண்டி கிழங்கெடுத்து வருகிறார். இந்த மச்சி நாயகி இதில் சொக்கிப் போக வைக்கும் அளவுக்கு கிக்கை ஏற்றி நடித்துள்ளாராம்.

சுபாவின் கவர்ச்சி மட்டும் போதுமா என்று யோசித்துப் பார்த்த சண்முகம், சட்டுப் புட்டென்று மும்பையிலிருந்து இரண்டு குஜிலிகளைக் கூப்பிட்டு வந்து குளு குளு குத்தாட்டம் போட வைத்திருக்கிறார்.


மெலீசா, ஷானா கான் ஆகியோர்தான் அந்த மும்பை முயல்கள். சும்மா சொல்லக்கூடாதுங்காணும்!, ரெண்டு புள்ளைகளும் பூந்து வெள்ளாடிருக்கிறாக்கங்களாம்.

இதில் மெலீசாவுக்கு தமிழ் புதிதல்ல. சானாவுக்கே கோலிவுட் புச்சு..

இந்த கவர்ச்சிப் பந்துகளின் துள்ளல் ஆட்டம், ரசிகர்களின் நெஞ்சை கும்மியடிக்க வைக்கும் என்று உறுதியாக கூறுகிறார் சண்முகம்.

இருவரும் ஆடியுள்ள குத்துப் பாட்டு ரசிகர்களை உட்கார வைக்காமல் உந்தித் தள்ளுமாம், அந்த அளவுக்கு மந்தியாட்டம் போட்டிருக்கிறார்களாம் இரு மும்பை அழகிகளும்.

சுபா புஞ்சா, மெலீசா, ஷானா கான் என முப்பெரும் குஜிலிகளுடன் உருவாகும் ஓ..நெஞ்சே, ரசிகர்களின் நெஞ்சை நசுக்கப் போவது உறுதி!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X