twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தங்கர் பச்சானின் 'தங்கக் கைக்கு' வந்து சேர்ந்த சாந்தனு, இனியா!

    By Sudha
    |

    Iniya
    தமிழிலில் பிரேக்கே கிடைக்காமல் தவித்து வரும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், பாரதிராஜாவின் கைக்குப் போயும், கடைசியில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் கை நழுவிப் போன இனியாவும் இப்போது தங்கர் பச்சான் என்ற சிறந்த படைப்பாளியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இதனால் இருவரும் இப்போதே பெரும் வெற்றிப் புன்னகையுடன் காணப்படுகின்றனர்.

    தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல் முத்துக்களில் ஒருவர்தான் தங்கர். இவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்தால் கூட போதும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் எத்தனையோ பேர். உணர்ச்சிகரமான இவரது படங்கள் அனைத்துமே வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவையே.

    இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.

    பாக்யராஜின் மகன் என்ற பெருமையுடன்தான் இதுவரை இருக்கிறார் சாந்தனு. சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் என்று சொல்லும் நாள் இதுவரை அவருக்கு வரவில்லை. நல்ல பிரேக்குக்காக காத்திருக்கு்ம் அவருக்கு தங்கர் படம் கிடைத்திருப்பது பெரும் சந்தோஷம் தந்துள்ளதாம்.

    அதேபோல வாகைசூட வா படம் மூலம் மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்தவர் இனியா. அடுத்து பாரதிராஜாவின் படம் அவருக்கு கிடைத்தபோதும் கடைசியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் மலையாளத்தைச் சேர்ந்த இனியா.

    இந்த நிலையில் இந்த இருவரும் தங்கரின் பொற் கரங்களுக்குள் வந்திருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.

    English summary
    Shanthanu and Iniya are set to act in Thankar Bachan's Ammavin Kaipesi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X