Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தங்கர் பச்சானின் 'தங்கக் கைக்கு' வந்து சேர்ந்த சாந்தனு, இனியா!
தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல் முத்துக்களில் ஒருவர்தான் தங்கர். இவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்தால் கூட போதும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் எத்தனையோ பேர். உணர்ச்சிகரமான இவரது படங்கள் அனைத்துமே வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவையே.
இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.
பாக்யராஜின் மகன் என்ற பெருமையுடன்தான் இதுவரை இருக்கிறார் சாந்தனு. சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் என்று சொல்லும் நாள் இதுவரை அவருக்கு வரவில்லை. நல்ல பிரேக்குக்காக காத்திருக்கு்ம் அவருக்கு தங்கர் படம் கிடைத்திருப்பது பெரும் சந்தோஷம் தந்துள்ளதாம்.
அதேபோல வாகைசூட வா படம் மூலம் மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்தவர் இனியா. அடுத்து பாரதிராஜாவின் படம் அவருக்கு கிடைத்தபோதும் கடைசியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் மலையாளத்தைச் சேர்ந்த இனியா.
இந்த நிலையில் இந்த இருவரும் தங்கரின் பொற் கரங்களுக்குள் வந்திருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.