Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
செல்லம்மா அம்மாவைத் தெரியும்.. ஷெல்லி கிஷோரைத் தெரியுமா...?
சென்னை: பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின் ஆகியோரைத்தான் திரையில் பலரும் விழி விரிய பார்த்திருப்பார்கள்.. ஆனால் சைடில் நடிக்கும் பலர் கவனிக்கப்படாமலேயே போய் விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷெல்லி கிஷோர்.
தங்கமீன்கள் படத்தைப் பற்றியும், அந்தப் படத்தின் கதையைப் பற்றியும், இயக்குநர் ராம் பற்றியும், அந்தக் குட்டிப் பாப்பா பற்றியும்தான் நிறை பேசினர்.. ஆனால் குட்டிப் பாப்பாவின் அம்மா வடிவை நிறையப் பேர் வசதியாக மறந்து விட்டனர்.
அந்த வடிவின் பெயர்தான் ஷெல்லி கிஷோர். மலையாளத்து நடிகை. அருமையான நடிகை, அழகான டான்ஸர்.. என்று பல விஷயங்கள் இவரிடம் புதைந்து கிடக்கின்றன.
துபாயிலிருந்து பத்மப்ரியா வழியாக
பிறப்பு கேரளா என்றாலும் கூட துபாயில்தான் இவர் வளர்ந்துள்ளார். நடிகை பத்மப்ரியா இவருக்கு நல்ல தோழியாம். அவர் மூலம்தான் தங்கமீன்கள் வாய்ப்பும் கிடைத்ததாம்.
புன்னகை இளவரசி
எப்படி நம்ம ஊரில் சினேகாவுக்கு புன்னகை இளவரசி என்று பெயர் வைத்து செல்லம் கொஞ்சுகிறார்களோ அதே போல ஷெல்லிக்கு அவரது சுற்றமும், நட்பும் அந்தப் பெயரை இட்டு சந்தோஷிக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது.. ஷெல்லி சிரித்தால் சில்லுன்னுதான் இருக்கு.
நிறைய நடிக்கனும்.. வீணை வாசிக்கனும்
ஷெல்லிக்கு இப்போது தங்க மீன்கள் மூலம் நிறைய வெளிச்சம் கிடைத்துள்ளதாம். இதனால் சினி்மாவில் விதம் விதமான கேரக்டர்களில் நிறை நடிக்கப் போவதாக கூறுகிறார். அதேபோல வீணை வாசிக்க வேண்டும் என்பதும் இவரது ஆசைகளில் ஒன்றாம். கத்துக்கப் போகிறாராம்.
டிவியில் பிரபலம்
மலையாளத்தில் வெளியான குங்குமப்பூவு என்ற சீரியலில் இவர் ஷாலினி என்ற வேடத்தில் நடித்துப் பிரபலமானவரும் கூட. கேரளா கபே உள்ளிட்ட சில மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
மலையாளத்துக்கு தமிழ் பரவாயில்லை
தமிழ்த் திரையுலகம் குறித்து ஷெல்லி கூறுகையில், மலையாளத்தில் நிறைய நடிகைகள் உள்ளனர். ஆனால் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் திறமைசாலிகளை வாரியணைத்துக் கொள்கிறது என்று பூரிக்கிறார்.
ஆமாமா.. குறிப்பாக கேரளாவிலிருந்து வந்தா எங்காளுங்க விட மாட்டாங்க... அள்ளிக்குவாங்க!