Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்லம்மா அம்மாவைத் தெரியும்.. ஷெல்லி கிஷோரைத் தெரியுமா...?
சென்னை: பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின் ஆகியோரைத்தான் திரையில் பலரும் விழி விரிய பார்த்திருப்பார்கள்.. ஆனால் சைடில் நடிக்கும் பலர் கவனிக்கப்படாமலேயே போய் விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷெல்லி கிஷோர்.
தங்கமீன்கள் படத்தைப் பற்றியும், அந்தப் படத்தின் கதையைப் பற்றியும், இயக்குநர் ராம் பற்றியும், அந்தக் குட்டிப் பாப்பா பற்றியும்தான் நிறை பேசினர்.. ஆனால் குட்டிப் பாப்பாவின் அம்மா வடிவை நிறையப் பேர் வசதியாக மறந்து விட்டனர்.
அந்த வடிவின் பெயர்தான் ஷெல்லி கிஷோர். மலையாளத்து நடிகை. அருமையான நடிகை, அழகான டான்ஸர்.. என்று பல விஷயங்கள் இவரிடம் புதைந்து கிடக்கின்றன.
துபாயிலிருந்து பத்மப்ரியா வழியாக
பிறப்பு கேரளா என்றாலும் கூட துபாயில்தான் இவர் வளர்ந்துள்ளார். நடிகை பத்மப்ரியா இவருக்கு நல்ல தோழியாம். அவர் மூலம்தான் தங்கமீன்கள் வாய்ப்பும் கிடைத்ததாம்.
புன்னகை இளவரசி
எப்படி நம்ம ஊரில் சினேகாவுக்கு புன்னகை இளவரசி என்று பெயர் வைத்து செல்லம் கொஞ்சுகிறார்களோ அதே போல ஷெல்லிக்கு அவரது சுற்றமும், நட்பும் அந்தப் பெயரை இட்டு சந்தோஷிக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது.. ஷெல்லி சிரித்தால் சில்லுன்னுதான் இருக்கு.
நிறைய நடிக்கனும்.. வீணை வாசிக்கனும்
ஷெல்லிக்கு இப்போது தங்க மீன்கள் மூலம் நிறைய வெளிச்சம் கிடைத்துள்ளதாம். இதனால் சினி்மாவில் விதம் விதமான கேரக்டர்களில் நிறை நடிக்கப் போவதாக கூறுகிறார். அதேபோல வீணை வாசிக்க வேண்டும் என்பதும் இவரது ஆசைகளில் ஒன்றாம். கத்துக்கப் போகிறாராம்.
டிவியில் பிரபலம்
மலையாளத்தில் வெளியான குங்குமப்பூவு என்ற சீரியலில் இவர் ஷாலினி என்ற வேடத்தில் நடித்துப் பிரபலமானவரும் கூட. கேரளா கபே உள்ளிட்ட சில மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
மலையாளத்துக்கு தமிழ் பரவாயில்லை
தமிழ்த் திரையுலகம் குறித்து ஷெல்லி கூறுகையில், மலையாளத்தில் நிறைய நடிகைகள் உள்ளனர். ஆனால் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் திறமைசாலிகளை வாரியணைத்துக் கொள்கிறது என்று பூரிக்கிறார்.
ஆமாமா.. குறிப்பாக கேரளாவிலிருந்து வந்தா எங்காளுங்க விட மாட்டாங்க... அள்ளிக்குவாங்க!