ஹீரோயின்
தமிழில் ஷெரீனுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து போய் விட்டதால், கன்னடத்திலும், தெலுங்கிலும் வாய்ப்புதேட ஆரம்பித்து விட்டாராம்.
துள்ளுவதோ இளமைக்குப் பிறகு ஷெரீனைத் தேடி எக்கச்சக்க படங்கள் ஓடி வந்தன.
ஆனால் சரியான படங்களைஅவர் தேர்வு செய்யவில்லை. தேர்ந்தெடுத்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் மார்க்கெட் சரிந்தது.
இதையடுத்து எவ்வளவு கவர்ச்சி காட்வும் தயார் என்று இறங்கி வந்தார். தயாரிப்பாளர்களை வீடு தேடிப் போய்சந்தித்து வந்தார்.
ஆனால், அதிரடி புதுமுகங்கள், திரிஷா, கிரண் என மார்க்கெட் வேறு திசையில் போய்க்கொண்டிருப்பதால் ஷெரீனுக்கு யாரும் சான்ஸ் கொடுக்க முன் வரவில்லை.
தமிழில் அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. இதனால் சொந்த ஊரான பெங்களூருக்கே வண்டியேறி விட்டார்.
அங்கிருந்தபடி கன்னடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். தெலுங்கிலும் தமிழிலும் அங்கிருந்தபடியே சான்ஸ்தேடுவாராம்.


Click it and Unblock the Notifications











