செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் 'திகில்'

By Shankar

பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு திடீரென காணாமல் போய் மீண்டும் வந்திருக்கும் செரீன் நடிக்கும் புதிய படம் திகில்.

அசோக் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

கல்கி ஸ்ருதி, ரவிகாளே, விஜய் ஆனந்த், ஜெயஸ்ரீ ராஜ், அரவிந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
பாடல்களை அண்ணாமலை எழுத, ஆஸ்லி மண்டோனிகா இசையமைக்கிறார்.

எழுதி இயக்கி இருப்பவர் - சந்தோஷ் கொடன்கேரி.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, "இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஹாரர் திரில்லர் படம். தொலைக்காட்சி

ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் செரீனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. திடீரென்று சில நாட்கள் அவருக்கு விடுமுறை கிடைக்க எட்டு மாதம் கழித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டவரைப் பார்க்க அவரிடம் சொல்லாமல் செல்ல முடிவு செய்கிறார்.

சென்னையில் இருந்து கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற இடத்தை வந்தடைகிறார். கூர்க் மலைப் பிரதேசம் என்பதால் இரவுப் பயணத்தைத் தவிர்பதற்காக வாடகை வீடு ஒன்றில் தங்குகிறார். அங்கு அவருக்கு எல்லா வசதிகளும் கிடைகின்றன.

Sherin's come back movie Dhigil

அந்த வீட்டில் ஒரு இடத்தில் துப்பாக்கி மற்றும் பழைய கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். விடிவதற்கு முன்பு அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் படத்தின் திரைக்கதை. இந்தஅ படத்திற்காக ஒரே இடத்தில் இருபது நாட்கள் இரவு மட்டுமே படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. விரைவில் அனைவருக்கும் ஒரு திகில் அனுபவம் காத்திருக்கிறது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X