ஹீரோயின்
ஷெரீனுக்கு திடீரென்று விபரீதமான ஆசை ஒன்று மனதில் தோன்றியுள்ளது. அதைத் தன் மனதோடுவைத்துக் கொள்ளாமல் எல்லோரிடத்திலும் கூறி அவர்களை பீதியில் ஆழ்த்தி வருகிறார் அவர்.
கவர்ச்சி, கவர்ச்சியை தவிர வேறொன்றுமில்லை என்பதை தனது லட்சியமாகக் கொண்டு ஆட்டம்போட்டு வரும் ஷெரீன் இப்போது நடிப்பு குறித்தும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இனிமேல் கண்டபடி கவர்ச்சி காட்டாமல் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று அவர்முடிவெடுத்துள்ளாராம். அத்தோடு நில்லாமல் ஸ்ரீதேவி, ரேவதி, ராதிகா மாதிரி நடித்து அவர்களைவிட நல்ல பெயர் பெற வேண்டும் என்று வேறு கூறி வருகிறாராம்.
"இங்குதான் இடிக்குதுங்கோவ்" என்று தயாரிப்பாளர்கள் கதறுகிறார்கள். "ஷெரீனிடம் நடிப்பை யார்எதிர்பார்க்கிறார்கள்? அதை ஏன் அவர் புரிந்து கொள்ளமாட்டேங்கிறார்? அடிக்கடி இப்படிகுழப்புகிறாரே" என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
அடடா... இந்தப் பிரச்சினையை எப்படி தீர்த்து வைப்பது? நீங்களே ஏதாவது ஐடியா இருந்தாசொல்லுங்களேன்?


Click it and Unblock the Notifications











