twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டேஞ்சர் ஷெரீன் நீண்ட நாட்களுக்குப் பின் ஷெரீன் மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் அல்ல, தெலுங்கில்.உண்மைச் சம்பவத்தை படமாக்குவதில் பெரிய ஆட்கள் தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகினர். நிஜமாக நடந்தசம்பவங்களுடன் மசாலாவை அரைத்துவிட்டு கரைத்து ஈஸ்ட்மென் வண்ணத்தில் படக் கதையை கொண்டு வந்துவிடுவார்கள்.அப்படியாக உண்மை சம்பவத்துடன் கொஞ்சம் வயலன்ஸ், திகில் மற்றும் கவர்ச்சி காரம் சேர்க்கப்பட்ட ஒரு படம் தான் டேஞ்சர்.படத்தை 35 நாட்களில் எடுத்து முடித்துள்ளார்கள். நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனின் வீட்டுக்காரர் கிருஷ்ண வம்சிதான் படத்தைஇயக்கியுள்ளார்.இப்படத்தில் சாய்ராம், அபிஷேக் ஆகிய இரு ஹீரோக்கள். அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர்கள் ஷெரீன் மற்றும் சுவாதி.திகில் படமான இதில் பாட்டு கிடையாது, சென்டிமென்ட் கிடையாது. படம் முழுக்க திகில், பகீர் சம்பவங்கள் தானாம்.திகில் படம் என்றால் கிளாமர் இல்லாமலா?. அதற்காக ஷெரீனையும், சுவாதியையும் களமிறக்கிவிட்டுள்ளார்கள். அவர்களும்தங்கள் திறமையை நன்றாகவே நிரூபித்துள்ளார்கள்.அதிலும் கேமராவைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதாலோ என்னவோ, ஷெரீன் தான் கவர்ச்சியில் ஏகத்துக்கும்களேபரப்பத்துவிட்டாராம். சுவாதியும் சளைக்கவில்லை. பழைய நடிகையான அவர் கிடைத்த வாய்ப்பை நன்றாகவேபயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.இருவருமே டூ பீசில் தவக்கா ஆட்டம் போட்டுக் கலக்கியுள்ளாராம். படத்தை அப்படியே தமிழிலும் டப் செய்து வெளியிடத்திட்டமிட்டிருக்கிறார்கள்.இந்த ஒரு படம் தவிர வேறு எந்தப் படமும் இல்லாததால் ஷெரீன் தொடர்ந்து மும்பையில் இருந்தபடி விளம்பரப் படங்களில்நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் ஆள் வைத்து சான்ஸ் தேடியபடி தான் உள்ளார். வாய்ப்பு வாங்கித் தருபவர்களுக்குசம்பளத்தில் 40 சதவீதம் வரை கமிஷன் தரவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.இப்படி, அப்படி என்று கஷ்டப்பட்டு வலை வீசியதில் கண்களால் கைது செய் படத்தில் ஹீரோவாக நடித்த வசீகரனுடன் ஜோடிசேர ஷெரீனுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாததால்,சோகமாகவே இருக்கிறார் ஷெரீன்.

    By Staff
    |

    நீண்ட நாட்களுக்குப் பின் ஷெரீன் மீண்டும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தமிழில் அல்ல, தெலுங்கில்.

    உண்மைச் சம்பவத்தை படமாக்குவதில் பெரிய ஆட்கள் தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகினர். நிஜமாக நடந்தசம்பவங்களுடன் மசாலாவை அரைத்துவிட்டு கரைத்து ஈஸ்ட்மென் வண்ணத்தில் படக் கதையை கொண்டு வந்துவிடுவார்கள்.

    அப்படியாக உண்மை சம்பவத்துடன் கொஞ்சம் வயலன்ஸ், திகில் மற்றும் கவர்ச்சி காரம் சேர்க்கப்பட்ட ஒரு படம் தான் டேஞ்சர்.

    படத்தை 35 நாட்களில் எடுத்து முடித்துள்ளார்கள். நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனின் வீட்டுக்காரர் கிருஷ்ண வம்சிதான் படத்தைஇயக்கியுள்ளார்.


    இப்படத்தில் சாய்ராம், அபிஷேக் ஆகிய இரு ஹீரோக்கள். அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர்கள் ஷெரீன் மற்றும் சுவாதி.

    திகில் படமான இதில் பாட்டு கிடையாது, சென்டிமென்ட் கிடையாது. படம் முழுக்க திகில், பகீர் சம்பவங்கள் தானாம்.

    திகில் படம் என்றால் கிளாமர் இல்லாமலா?. அதற்காக ஷெரீனையும், சுவாதியையும் களமிறக்கிவிட்டுள்ளார்கள். அவர்களும்தங்கள் திறமையை நன்றாகவே நிரூபித்துள்ளார்கள்.

    அதிலும் கேமராவைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதாலோ என்னவோ, ஷெரீன் தான் கவர்ச்சியில் ஏகத்துக்கும்களேபரப்பத்துவிட்டாராம். சுவாதியும் சளைக்கவில்லை. பழைய நடிகையான அவர் கிடைத்த வாய்ப்பை நன்றாகவேபயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


    இருவருமே டூ பீசில் தவக்கா ஆட்டம் போட்டுக் கலக்கியுள்ளாராம். படத்தை அப்படியே தமிழிலும் டப் செய்து வெளியிடத்திட்டமிட்டிருக்கிறார்கள்.

    இந்த ஒரு படம் தவிர வேறு எந்தப் படமும் இல்லாததால் ஷெரீன் தொடர்ந்து மும்பையில் இருந்தபடி விளம்பரப் படங்களில்நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.

    அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் ஆள் வைத்து சான்ஸ் தேடியபடி தான் உள்ளார். வாய்ப்பு வாங்கித் தருபவர்களுக்குசம்பளத்தில் 40 சதவீதம் வரை கமிஷன் தரவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

    இப்படி, அப்படி என்று கஷ்டப்பட்டு வலை வீசியதில் கண்களால் கைது செய் படத்தில் ஹீரோவாக நடித்த வசீகரனுடன் ஜோடிசேர ஷெரீனுக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாததால்,சோகமாகவே இருக்கிறார் ஷெரீன்.

      Read more about: sherins danger
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X