மணி ரத்னம் படம்... என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகுது! - ஷெர்லின் சோப்ரா
தமிழ் சினிமா மீது பெரிய மரியாதை வைத்திருப்பதாகவும் தமிழில் நடிக்க ஆசையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா நடிகையாக இருந்தாலும், நிர்வாண மாடலாக உலகமெங்கும் அறியப்பட்டவர் ஷெர்லின். ஆரம்பத்தில் இவர் பெயர் மோனா சோப்ரா. பிறகு பெயரை மாற்றிக் கொண்டார்.

ஏடாகூடம்
தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் ஓரு ஏடா கூட படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.
ப்ளேபாய்
ப்ளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பேற்படுத்தியவர் ஷெர்லின் சோப்ரா. தொடர்ந்து தனது சூடான படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
காமசூத்ரா
இப்போது காமசூத்ரா 3 டி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே மாதம் வெளியாகவிருக்கிறது.
சென்னையில்
சமீபத்தில் சென்னை வந்த ஷெர்லின் சோப்ரா அளித்த பேட்டியில், "நான் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
மணிரத்னம் படத்தில்
தென்னிந்திய டெக்னீஷியன்கள் மிகவும் திறமையாளர்கள். எனது நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறப் போகிறது. மணிரத்னம் அடுத்து தெலுங்கு, இந்தியில் இயக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











