3டி காமசூத்ரா படத்தில் ஷெர்லின் சோப்ரா!
டெல்லி: மாடலாக இருந்து நடிகையாகி, இப்போது அடுத்தடுத்து ஆபாசம், நிர்வாணம் என்று அதகளம் செய்து வரும் நடிகை ஷெர்லின் சோப்ரா அடுத்து காமசூத்ரா படத்தில் நடிக்கப் போகிறாராம். அதாவது 3டி காமசூத்ரா படத்தில் வரப் போகிறாராம். ரூபேஷ் பால் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.
பிளேபாய் அட்டைப் படத்திற்காக சமீபத்தில்தான் நிர்வாணமாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஷெர்லின். இந்தியப் பெண் ஒருவர் பிளேபாய்க்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தது இதுவே முதல் முறை.
தொடர்ந்து தனது பிளாக் மற்றும் டிவிட்டரில் நிர்வாண போஸ், குண்டக்க மண்டக்க போஸ் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.இது கற்பனை காமசூத்ரா கதை இல்லையாம். வாத்ஸயனர் எழுதிய ஒரிஜினல் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ளதை அப்படியே படமாக்கப் போகிறாராம் சோப்ரா. அதை 3டி வடிவில் தரப் போகிறாராம்.
கேன்ஸ் பட விழாவின்போது இதுதொடர்பான அறிவிப்பை பால் வெளியிட்டார். இவர் ஏற்கனவே செயின்ட் டிராகுலா 3டி படத்தை இயக்கியவர்.
ஏற்கனவே மீரா நாயர் காமசூத்ராவை அடிப்படையாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார். அதை ஷெர்லின் மிஞ்சுவாரா என்பது படத்தைப் பார்த்த பிறகுதான் சொல்ல முடியும். இருந்தாலும் இந்த 3டி காமசூத்ரா நிச்சயம் வெள்ளித் திரைகளை சுட்டெரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications












