Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?
சென்னை : சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் வெளியேறுவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியேறுகிறேன் என்று, சொன்னதற்கான காரணம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
இதனால், இணையவாசிகள் அந்த பிரபல நடிகையை வெச்சி செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய் குறித்து கேலி பேச்சு … சரியான பதிலடி கொடுத்த கேஜிஎஃப் 2 நடிகை!
ஷில்பா ஷெட்டி
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தற்போது படங்களில் பிஸியாக நடிக்காகவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால், சமூகவலைத்தளத்தில் ஏராளமான பாலோவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
வெளியேறுகிறேன்
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, திடீரென சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் ஒதுக்கி இருக்க முடிவு செய்து இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், ஒரே மாதிரியான விஷயங்களை பதிவு செய்து பதிவு செய்து மிகவும் சலிப்பு அடைந்துவிட்டதாகவும், புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கும் வரை, சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கிண்டலடித்து வருகின்றனர்.
ஷில்பா ஷெட்டி சமூகவலைத்தளத்தைவிட்டு வெளியேறியதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல நெட்டிசன்ஸ் நீங்கள் வெளியேறுகிறேன் என்று சொன்னது கூட ஒகே ஆனால், அதற்கான சொன்ன காரணம் தான் சிரிப்பை ஏற்படுத்துவதாக பல நெட்டிசன்ஸ் ஷில்பா ஷெட்டியை கிண்டலடித்து வருகின்றனர்.