twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி

    By Shankar
    |

    பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, தனது கண்களை தானம் செய்தார்.

    Shilpa Shetty donates her eyes

    நேற்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தனர் ஷில்பாவும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும்.

    பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார்.

    இதுகுறித்து ஷில்பா கூறுகையில், "நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்கள் மற்றவர்களுக்கு பார்வை வழங்கும் என்ற செய்தியே இப்போது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், "நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.

    English summary
    Actress and Rajasthan Royals owner Shilpa Shetty has donated her eyes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X