ரீமா-ஷில்பா மீது கேஸ் தமிழ் மாலை நாளிதழ் ஒன்றில் வெளியான நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோரின் ஆபாசப் புகைப்படங்கள் இளைஞர்களை கெடுப்பதாக இருப்பதாக கூறி மதுரை நீதிமன்றத்தில் ரீமா, ஷில்பா மற்றும் சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்ற வழக்கறிஞர் மதுரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ் மாலை நாளிதழில், நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோரின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் முழுப் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளன. மிகவும் ஆபாசமாகவும், இளைஞர்களின் மனதிதைக் கெடுக்கும் வகையிலும் இந்தப் புகைப்படங்கள் பிரசுரமாகியுள்ளன. பெண்களின் சுய மரியாதை மற்றும் ஒழுக்கத்தை இழிவுபடுத்துவதாக இந்த படங்களை அந்த மாலை நாளிதழ் பிரசுரித்துள்ளது. எனவே ஆபாசமாக போஸ் கொடுத்த நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி மற்றும் புகைப்படங்களைப் பிரசுரித்த பத்திரிக்கை ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீதாராமன், நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி, மாலை நாளிதழின் ஆசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் மாலை நாளிதழ் ஒன்றில் வெளியான நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோரின் ஆபாசப் புகைப்படங்கள் இளைஞர்களை கெடுப்பதாக இருப்பதாக கூறி மதுரை நீதிமன்றத்தில் ரீமா, ஷில்பா மற்றும் சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்ற வழக்கறிஞர் மதுரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில்,
தமிழ் மாலை நாளிதழில், நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோரின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் முழுப் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளன.
மிகவும் ஆபாசமாகவும், இளைஞர்களின் மனதிதைக் கெடுக்கும் வகையிலும் இந்தப் புகைப்படங்கள் பிரசுரமாகியுள்ளன. பெண்களின் சுய மரியாதை மற்றும் ஒழுக்கத்தை இழிவுபடுத்துவதாக இந்த படங்களை அந்த மாலை நாளிதழ் பிரசுரித்துள்ளது.
எனவே ஆபாசமாக போஸ் கொடுத்த நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி மற்றும் புகைப்படங்களைப் பிரசுரித்த பத்திரிக்கை ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சீதாராமன், நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி, மாலை நாளிதழின் ஆசிரியர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்கு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications