Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மலையாள தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார்: வழக்கு தொடரவும் முடிவு
நடிகை ஸ்ரேயா நடித்து அண்மையில் வெளிவந்த மலையாள படம் போக்கிரி ராஜா. அதில் மம்மூட்டி, பிருத்விராஜ், ரியாஸ்கான், சரண்ராஜ், காதல் தண்டபாணி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தம்பியான மம்முட்டி, பிரித்விராஜில் ஸ்ரேயா தம்பியைக் காதலிக்கிறார். தனது தம்பியின் காதலை சேர்த்து வைக்க அண்ணன் போராடுவது தான் கதை.
இந்த படத்தை தாமஸ் ஆண்டனி என்பவர் தயாரித்துள்ளார். இந்நிலையில் தாமஸ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது,
போக்கிரி ராஜா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போதே அதை வேறு மொழிகளிலும் டப் செய்து வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து தான் நடிக்க ஓகே சொன்னேன். அதற்கான ஒப்பந்தத்தில் நானும், தாமஸ் ஆண்டனியும் கையெழுத்திட்டுள்ளோம். இந்நிலையில் ஒப்பந்தத்தை தாமஸ் மீறிவிட்டார். அதனால் அவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன்.
போக்கிரி ராஜா படத்தை தமிழ் உள்பட வேறு எந்த மொழியிலும் டப் செய்து வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்திருக்கிறேன் என்றார்.