மழை நீரில் தத்தளித்த நாய்க்குட்டியைக் காப்பாற்றிய ஷ்ரேயா!

By Sudha

தேங்கிக் கிடந்த மழை நீரில் நடுங்கியபடி தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை மீட்ட நடிகை ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அத்தோடு நில்லாமல் அந்த நாய்க்குட்டியை தனது வீட்டுக்குக் கொண்டு போய் வளர்த்தும் வருகிறார். அந்த குட்டி நாய்க்கு த்ரு என்று பெயரிட்டுள்ளாராம் ஷ்ரேயா.

பிராணிகள் மீது அதீத பாசம் வைத்துள்ளவர்கள் நம்மில் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக நடிகர், நடிகைகள் பலரும் பிராணிகள் மீது நல்ல பாசம் வைத்துள்ளனர். பழைய நடிகை அமலா பிராணிகள் மீது மகாப் பிரியமாக இருப்பவர். அதேபோல திரிஷாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

அந்த வகையில் நடிகை ஷ்ரேயாவும் நாய்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் தனது நாய்ப்பாசத்தை அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் காரில் போய்க் கொண்டிருந்தாராம் ஷ்ரேயா. அப்போது சாலையோரமாக தேங்கிக் கிடந்த மழை நீரில் ஒரு குட்டி நாய் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உடனடியாக காரை நிறுத்திய ஷ்ரேயா நாய்க்குட்டியை நெருங்கிப் பார்த்தபோது அதன் உடலில் புண்ணாக இருந்துள்ளது. மிகவும் பரிதவிப்புடன் காணப்பட்ட அந்த நாய்க்குட்டியை பரிவுடன் தூக்கிய ஷ்ரேயா உடனே ஒரு கால்நடை மருத்துவமனைக்கு வண்டியை விட்டார். அங்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

பின்னர் தனது வீட்டுக்குத்திரும்பிய ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை தற்போது தானே வளர்த்து வருகிறார். நாய்க்குட்டிக்கு த்ரு என்று பெயரிட்டு செல்லமாக கவனித்தும் வருகிறாராம்.

பாராட்டுக்குரியவர்தான் ஷ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X