Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலா படத்தில் கரகாட்டக்காரியாக வரும் ஸ்ரேயா!
தமிழ் சினிமா உலகே கிட்டத்தட்ட மறந்துபோன ஸ்ரேயா, கைப்பிடித்து அழைத்து வருகிறார் இயக்குநர் பாலா, தனது புதிய படத்துக்கு ஹீரோயினாக.
பாலா இயக்கும் கரகாட்ட கதை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா.
சிவாஜிக்குப் பிறகு
எனக்கு 20 உனக்கு 18 மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்த பிறகு இந்தியாவின் பல மொழிப் படங்களிலும் விரும்பப்படும் நட்சத்திரமானார்.
விஜய், விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கிலும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தார்.
வாய்ப்பில்லை
ஆனால் சமீப காலமாக இளம் நடிகைகள் ஆதிக்கம் செலுத்தியதால் ஸ்ரேயாவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போயின. தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியவில்லை. மூத்த ஹீரோக்கள்கூட அவரை அழைக்கவில்லை.
வெளிநாட்டு நிகழ்ச்சிகள்
இதனால் ஸ்ரேயா மார்க்கெட் சரிந்தது. தமிழில் அவருக்கு படங்களே இல்லை. இயகக்குநர்கள் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக ஜீவா ஜோடியாக நடித்த ‘ரௌத்திரம்' படம் 2011ல் வந்தது. அதே வருடம் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். எனவே வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப் போய் வந்தார்.
சந்திரா
சமீபத்தில் கன்னடத்தில் நடித்த சந்திரா படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.
பாலா
இந்த நிலையில் ஸ்ரேயாவை அழைத்து கரகாட்டத்தை மையமாக வைத்து எடுத்து வரும் படத்தில் கதாநாயகியாக்கியுள்ளார் இயக்குநர் பாலா. ஸ்ரேயா சிறந்த பரத நாட்டிய டான்சர். இந்த படத்துக்கு நடனம் தெரிந்தவர் தேவை என்பதால் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளார். படத்துக்கு இசை இளையராஜா.