Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரே நேரத்தில் திருப்பதியில் ஸ்ரேயா, ரிச்சா 'தரிசனம்' - அலைமோதிய பக்த கோடிகள்!!
ஸ்ரேயா அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மொய்த்தனர்.
அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். ஆனால் ஸ்ரேயா யாருக்கும் ஆட்டோகிராப் போடவில்லை. நான் இங்கு சாமி கும்பிட வந்துள்ளேன்.. நீங்களும் போய் சாமி கும்பிடுங்க என்று கடுப்பாகக் கூறிவிட்டு, வேமாக காருக்குள் சென்று விட்டார்.
பின்னர் ரசிகர்களுக்கு நிகராக முண்டியடித்து வந்த நிருபர்களிடம் கூறுகையில், "திருப்பதி வெங்கடாஜலபதி எனக்கு பிடித்தமான கடவுள். ஆண்டுக்கு நான்கு தடவை இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இதுதவிர என் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதிக்கு வருவேன்.
இந்த முறை தமிழ், கன்னட மொழிகளில் தயாரான சந்திரா படத்தில் நடித்துள்ளேன். இது விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்காகவே சாமி கும்பிட வந்தேன். இந்த இடத்தில் மன அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்," என்றார்.
அடுத்து ரிச்சா...
ஸ்ரேயா நகர்ந்த கையோடு ரிச்சா கங்கோபாத்யா வந்துவிட்டார். டபுள் தமாகா எனும் அளவுக்கு ஏக குஷியாகிவிட்டனர் ரசிகர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் அவரால் கோயில் படியிறங்கக் கூட முடியவில்லை. பின்னர் போலீஸ் துணையுடன் அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார்.
கோயிலுக்குப் போனால் வெளியே வராமலா போய்விடுவார் என்று வெளியில் ஏராளமானோர் காத்திருந்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரிச்சாவை அனைவரும் மொய்த்துக் கொண்டனர். ஒரு அடி கூட நகரவிடவில்லை. மீண்டும் போலீஸார் துணைக்கு வந்தனர். ரசிகர்களை தெலுங்கில் திட்டி அப்புறப்படுத்தினர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!