Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கல்யாணமாகி அதுக்குள்ள 2 வருஷம் ஆகிருச்சா? ஸ்ரேயா ஆச்சரியம்
சென்னை: கல்யாணமாகி அதற்குள் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதா என்று ஆச்சரியம் பொங்க கேட்கிறார் நடிகை ஸ்ரேயா.
தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையள படங்களிலும் நடித்துவருகிறார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நம்ப முடியலை
இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க, ரஷ்யாவில் இருந்து மும்பை வந்துள்ள ஸ்ரேயா, 'எனக்கு திருமணமாகி, அதற்குள் கிட்டத்திட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
கணவர் வீட்டில்
அவர் மேலும் கூறும்போது, 'எனது கணவர் வீட்டில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நடிப்பு எனக்கு முக்கியம். இன்னும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று என் கணவர் விரும்புகிறார்.
மும்பைக்கு
என் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சிம்பிளானது. அதை மறைக்கத் தேவையில்லை. பல்வேறு நாடுகளுக்கு பறந்துகொண்டிருந்தாலும் மும்பைக்கு வந்துவிடுகிறேன். இங்குதான் என் குடும்பம் இருக்கிறது. இந்தியாவை விட்டு விட எனக்கு விருப்பமில்லை.
நயா நயா லவ்
இப்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துவருகிறேன். இந்தியில், நயா நயா லவ் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறேன். இதில் அக்ஷய் கண்ணா, பிரியங்கா சர்மா நடிக்கின்றனர். நடனம் எனக்குப் பிடிக்கும். அதனால் ஒரு பாடலுக்கு ஆடுவதை அதிகம் விரும்புகிறேன் என்றார்.