Don't Miss!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயா: நெளிந்த பிரபலங்கள், ரசிகர்கள்
Recommended Video
துபாய்: துபாயில் நடந்த சிமா விருது விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் அணிந்து வந்த உடை ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
சிமா விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் கலந்து கொண்டு நடனம் ஆடினார். விருது விழாவில் நடனமாடப் போவதை சமூக வலைதளத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் அவர் அணிந்த உடை தான் அவரின் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
|
ஸ்ரேயா
ஸ்ரேயா லோ கட் கவுன் அணிந்து விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த லோகட் ரொம்பவே லோவாக இருந்ததால் பார்ப்பவர்கள் நெளிய வேண்டியதாகிவிட்டது. அந்த புகைப்படங்களை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் பலர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கவலையுடன் கேட்டுள்ளனர்.
வீடியோ
புகைப்படம் கூட பரவாயில்லை எனலாம். ஸ்ரேயா குஷியில் தனது இடுப்பை ஆட்டி ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்க மிகவும் மோசமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருமணம்
திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் தற்போதும் உள்ளார் ஸ்ரேயா. அவர் எப்பொழுதுமே கவர்ச்சியாக உடை அணிவார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா கூட திருமணத்திற்கு பிறகு பிகினி புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்துவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே அவர்களின் கேள்வி.
சினிமா
வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா. நான் திருமணம் செய்து கொண்டாலும் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. இங்கு தான் இருக்கிறேன், கால்ஷீட் வைத்திருக்கிறேன் என்று தனக்கு தெரிந்த ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு தூதுவிடுகிறாராம் அம்மணி.