Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விருது விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயா: நெளிந்த பிரபலங்கள், ரசிகர்கள்
Recommended Video
துபாய்: துபாயில் நடந்த சிமா விருது விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் அணிந்து வந்த உடை ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
சிமா விருது வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஸ்ரேயா சரண் கலந்து கொண்டு நடனம் ஆடினார். விருது விழாவில் நடனமாடப் போவதை சமூக வலைதளத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் அவர் அணிந்த உடை தான் அவரின் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
|
ஸ்ரேயா
ஸ்ரேயா லோ கட் கவுன் அணிந்து விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த லோகட் ரொம்பவே லோவாக இருந்ததால் பார்ப்பவர்கள் நெளிய வேண்டியதாகிவிட்டது. அந்த புகைப்படங்களை பார்த்து சில ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் பலர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கவலையுடன் கேட்டுள்ளனர்.
வீடியோ
புகைப்படம் கூட பரவாயில்லை எனலாம். ஸ்ரேயா குஷியில் தனது இடுப்பை ஆட்டி ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்க்க மிகவும் மோசமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு இதெல்லாம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருமணம்
திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே போன்று தான் தற்போதும் உள்ளார் ஸ்ரேயா. அவர் எப்பொழுதுமே கவர்ச்சியாக உடை அணிவார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமந்தா கூட திருமணத்திற்கு பிறகு பிகினி புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்துவிட்டால் இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க வேண்டுமா என்பதே அவர்களின் கேள்வி.
சினிமா
வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா. நான் திருமணம் செய்து கொண்டாலும் வெளிநாட்டில் செட்டில் ஆகவில்லை. இங்கு தான் இருக்கிறேன், கால்ஷீட் வைத்திருக்கிறேன் என்று தனக்கு தெரிந்த ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு தூதுவிடுகிறாராம் அம்மணி.