சாமி கும்பிடறேன்... டிஸ்டர்ப் பண்ணாதீங்க! - ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா தனது தாயாருடன் திருமலைக்கு சாமிகும்பிட வந்தார். ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்ற அவர், பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அவருக்கு தீர்த்த பிரசாதமும், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது.
நடிகை ஸ்ரேயா வந்திருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் கோவிலில் திரண்டனர். அவரிடம் கைகுலுக்க முயன்றனர். உடனே ரசிகர்களைப் பார்த்து ஸ்ரேயா கும்பிட்டார். கைகளை உற்சாகத்துடன் ஆட்டினார். ஆனாலும் ரசிகர்கள் நெருக்கியடித்தனர்.
உடனே, "திருப்பதி கோவிலுக்கு வந்தால் எனக்கு மன அமைதி கிடைக்கிறது. வருடத்துக்கு 2 அல்லது 3 முறை இங்கு வருவேன். அமைதியாக சாமி கும்பிட வந்துள்ளேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்," என்று கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











