Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!
சென்னை: சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார்.
இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடிபுகுந்துவிட்டார்.
இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம்.
இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.