Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'காவியமான' படத்தில் விஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெரிய சந்தோஷம்... ஸ்ருதி
சென்னை: சிம்புதேவன் இயக்கும் படத்தில் 'விஜய்யுடன் ஜோடி சேருவது, மிகப்பெரிய சந்தோஷம்' எனத் தெரிவித்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.
கத்தி படத்தைத் தொடர்ந்து விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாகக் கூறப்பட்டது. முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் ஸ்ரீதேவி நடிக்கிறார். வில்லனாக 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் இன்னொரு நாயகியாக சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். இத்தகவலை சுருதிஹாசனே அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பூஜை...
சுருதி தற்போது தமிழில் ‘பூஜை' படத்தில் விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, விஜய்-சிம்புதேவன் கூட்டணி படத்தில் இணைகிறார்.
டுவிட்டரில்...
விஜய்யுடன் சுருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. விஜய்யுடன் ஜோடி சேர்வது குறித்த தனது மகிழ்ச்சியை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
ரொம்ப சந்தோஷம்...
அதில் அவர், ‘சிம்புதேவன் அடுத்து இயக்கும் படத்தில், விஜய் ஜோடியாக நான் நடிப்பது, மிகப்பெரிய சந்தோஷத்தை தந்திருக்கிறது.
கதையல்ல... காவியம்
இது, ஒரு காவியம் என்று சொல்லக்கூடிய அபூர்வமான கதையம்சம் கொண்ட படம். அதில், நான் தமிழ் பெண்ணாக வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதை என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2 நாயகிகள்...
இதன் மூலம், விஜயின் 58வது படமான இப்படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் என்பது உறுதியாகியுள்ளது.