Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
17 வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஸ்ருதிஹாசன்
புனே: நடிகை ஸ்ருதிஹாசன் புனேவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புனேவை சேர்ந்த ஷீத்தல் பவார் (17) என்ற சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் முற்றிய நிலையில், மருத்துவர்கள் கை விரித்து விட வீட்டிற்கு அழைத்து வரப் பட்டார் ஷீத்தல்.
தனக்கு பிடித்தமான நடிகை ஸ்ருதி ஹாசனை நேரில் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என ஷீத்தல் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
கடைசி ஆசை...
ஷீத்தலின் கடைசி ஆசை குறித்து வித்யுத் ஜமால் உடன் ‘யாரா' இந்தி பட ஷூட்டிங்கில் மும்பையில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதியிடம் மேக் ஏ விஷ் என்ற அமைப்பு தெரிவித்தது.
நேரில் காண சென்றார்...
இதைக் கேள்விப்பட்ட ஸ்ருதி, ஷீத்தலின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதன்படி, இயக்குநரிடம் அனுமதி பெற்று ஷீத்தலை நேரில் காண அவரது வீட்டிற்குச் சென்றார்.
சினிமா பற்றி பேச்சு...
ஒரு நாள் முழுவதும் ஷீத்தலுடன் பொழுதைக் கழித்த ஸ்ருதி, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அவரது மன தைரியத்தைப் பாராட்டினார். நீண்ட நேரம் இருவரும் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்ததாக ஷீத்தலின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கடிதம்...
தன் கைப்பட எழுதிய ஒரு கடிதம் ஒன்றை ஷீத்தலிடம் வழங்கிய ஸ்ருதி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மும்பை சென்றார்.