Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வழக்கறிஞரைத் தொடர்ந்து 'பத்திரிகையாளராக' மாறிய ஸ்ருதிஹாசன்!
சென்னை: 'எஸ் 3' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சிங்கம்', 'சிங்கம் 2' படங்களைத் தொடர்ந்து 'எஸ் 3' படத்தில் சூர்யா மீண்டும் துரை சிங்கமாக களமிறங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், கிரிஷ், சூரி, ரோபோ சங்கர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யா என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஒரு பெரிய வழக்கில் மாட்டிக்கொள்ளும் சூர்யாவுக்கு ஸ்ருதி உதவி செய்கிறார்.
ஸ்ருதியுடன் உதவியுடன் சூர்யா வில்லன்கள் சாம்ராஜ்யத்தை அழிப்பது தான் 'எஸ் 3' படத்தின் கதை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதி வரை 'எஸ் 3' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ஸ்ருதி தனது தொடர்பான காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்ததாக 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
'வேதாளம்' படத்தில் ஸ்ருதி வழக்கறிஞராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.