Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடிச்சது தப்பேயில்லை... ஸ்வேதா பாசு ஆதரவு
மும்பை: ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்தது தவறல்ல எனக் கருத்து தெரிவித்துள்ளார் நடிகை சுவேதா பாசு.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராதிகா ஆப்தேயின் நிர்வாணப்படங்கள் இணையத்திலும், வாட்ஸ் அப்பிலும் வெளியாயின. ஆனால் அப்படத்தில் இருப்பது தானல்ல, ஏன் இப்படி சிலர் நடிகைகளை இழிவுப் படுத்துகிறார்கள் என ஆவேசப்பட்டார் ராதிகா ஆப்தே.
நிர்வாண வீடியோ...
இந்நிலையில், சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அது, பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷயப்பின் குறுப்படத்திற்காக எடுக்கப் பட்ட காட்சிகள் எனக் கூறப்பட்டது.
குறும்படம்...
20 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் கசிந்தது.
போலீசில் புகார்...
குறும்பட காட்சி கசிந்துள்ளதை பார்த்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தார். உடனே இது குறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வீடியோவை கசியவிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை இல்லாதவர்கள்...
தனது நிர்வாண வீடியோ வெளியானது தொடர்பாக ராதிகா ஆப்தே கூறுகையில், ‘நான் நடித்த நிர்வாண வீடியோவை யாரோ இணைய தளங்களில் வெளியிட்டு விட்டனர். நிறைய பேர் வேலை இல்லாமல் வெட்டியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த காரி யத்தை செய்துள்ளனர்.
நான் ரொம்ப பிசி....
அவர்களை பற்றி சிந்திக்கவோ நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்யவோ எனக்கு நேரம் இல்லை. நான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இவர்களுக்காக என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
கவலை இல்லை...
என்னையோ எனது குடும்பத்தினரையோ இந்த செயல் சிறிதும் பாதிக்க வில்லை. எனவே இதுபற்றி எனக்கு கவலை இல்லை' என்றார்.
விஷமிகளின் வேலை...
இந்நிலையில், குறும்படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்ததற்கு நடிகை சுவேதா பாசு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுவேதா பாசு கூறுகையில், "ராதிகா ஆப்தே நடித்த குறிப்பிட்ட காட்சியை விஷமிகள் இண்டர்நெட்டில் பரவ விட்டுள்ளனர்.
அனுராக் காஷ்யப்...
அனுராக் காஷ்யப் சிறந்த இயக்குனர். அவருக்கு மகள் இருக்கிறார். எனவே இந்த காட்சியை தவறாக எடுத்து இருக்கமாட்டார். எச்சரிக்கையாகவே எடுத்து இருப்பார்.
உறுதி மொழி...
இந்த காட்சி படமாக்கப்பட்ட போது ராதிகா ஆப்தேயையும் சேர்த்து இரண்டு பெண்கள் மட்டுமே அரங்கில் இருந்துள்ளனர். அத்துடன் இந்த படம் இந்தியாவில் திரையிடப்படாது என்றும் வெளிநாடுகளில் தான் ரிலீசாகும் என்றும் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது.
தவறல்ல...
ஆனால் விஷமிகள் இதை வெளியிட்டு விட்டனர். ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்தது தவறல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழில்...
பிரபல நடிகையான சுவேதா பாசு, குழந்தை நட்சத்திரமாக இருந்த போது தேசிய விருது வாங்கியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடிக்கு ஆளாகி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சுவேதாவே கண்ணீர் மல்க விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சினிமா...
நீதிமன்ற உத்தரவின்படி அவர் ஹைதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் 3 மாதங்கள் வரை தங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சுவேதா, பின்னர் தாயுடன் செல்ல அனுமதிக்கப் பட்டார். தற்போது மீண்டும் அவர் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.