Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்லக்குட்டியை இழந்து வாடும் த்ரிஷா: ஆறுதல் கூறிய சித்தார்த்
சென்னை: த்ரிஷா ஆசையாக வளர்த்த கேட்பரி என்ற நாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டது. இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள த்ரிஷாவுக்கு நடிகர் சித்தார்த் ஆறுதல் கூறினாராம்.
த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்துடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெருவில் அடிபட்டு படுகாயமடைந்து கிடந்த நாய் ஒன்றை த்ரிஷா காப்பாற்றினார்.
அதற்கு சிகிச்சை அளித்து கடந்த 10 ஆண்டுகளாக தன்னுடனேயே வைத்திருந்தார்.
கேட்பரி
தெருவில் தான் கண்டெடுத்த நாய்க்கு கேட்பரி என்று பெயர் வைத்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கேட்பரியுடன் தான் பொழுதை கழிப்பார்.
நாய்கள்
கேட்பரியின் வரவுக்கு பிறகே த்ரிஷா நாய்களை தத்தெடுத்து வளர்ப்பது குறித்து பிறரை அறிவுறுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு தான் பீட்டாவும் த்ரிஷாவை அணுகியது.
கேட்பரி மரணம்
கேட்பரிக்கு வயிற்றில் கட்டி வந்துள்ளது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்நிலையில் கேட்பரி மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டது.
நான் எப்படி வாழ்வேன்?
கேட்பரி இறந்ததையடுத்து என் செல்லக்குட்டி இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்று த்ரிஷா புலம்புகிறாராம். நான் கேட்பரியை தேடிச் செல்லவில்லை. அது தான் என்னை தேடி வந்தது. தற்போது இப்படி சென்றுவிட்டதே என்கிறாராம்.
சித்தார்த் ஆறுதல்
கேட்பரி தெருவில் அடிபட்டு த்ரிஷாவிடம் வந்தபோது சித்தார்த்தும் அந்த நாய்க்கு மசாஜெல்லாம் செய்துள்ளாராம். அதனால் அவருக்கும் கேட்பரிக்கும் இடையே ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டதாம். இந்நிலையில் கேட்பரி இல்லாமல் வாடும் த்ரிஷாவுக்கு சித்தார்த் ஆறுதல் கூறினாராம்.
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!