இந்தியில் தேடும் சிம்ரன்
பஞ்சாபி ராணி சிம்ரன் தமிழ் சினிமாவில் இருந்த காலத்தில் பெரும் புரட்சியையேஏற்படுத்தினார். அழகு, டான்ஸ், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் சகநடிகைகளுக்கு பெரும் சவாலாக இருந்தவர் சிம்ரன்.
ராஜு சுந்தரத்துடன் காதல், அப்பாஸுடன் கிசுகிசு, கமலுடன் ஏற்பட்ட நட்பு என இடைஇடையே சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டாலும் அதையும் தாண்டி தமிழ் ரசிகர்களைதனது நடிப்பு பிளஸ் அழகான டான்ஸால் கட்டிப் போட்டவர் சிம்ரன்.
கணவருடன் வந்து ஹோட்டலில் முகாமிட்டு மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடியசிம்ரனுக்கு கிடைத்தது ஏமாற்றமே. காரணம் கணவருக்கும் சேர்த்தே அவர் வாய்ப்புகேட்டதால் கோலிவுட் தயாரிப்பாளர்கள் காத தூரம் ஓடிப் போனார்கள்.
இந்த நேரத்தில்தான் வந்து சேர்ந்தது சட்டசபைத் தேர்தல். அதிமுகவுக்காக பிரசாரம்செய்தால் செம டப்பு தரப்படும் என கூறப்பட்ட ஆசை வார்த்தைக்கு மயங்கிஅதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்தார். ஆனால் சொன்னபடி காசுதான் முழுசாகவந்து சேரவில்லை என்கிறார்கள்.
அங்கிருந்தபடியே இந்திப் படங்களில் சான்ஸ் தேடி வருகிறார். இதற்காக அடிக்கடிமும்பைக்கும் பறக்கிறாராம்.
இப்போதும் கணவரை அவர் விட்டு விடவில்லை. இரண்டு பேருக்குமாக சேர்த்தேவாய்ப்பு கேட்டு வரும் சிம்ரன், இதற்காக எனக்கு மட்டும் சம்பளம் கொடுத்தால்போதும், ஊட்டுக்காரர் ஃப்ரீயாகவே நடிப்பார் எனவும் கூறி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications