Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
முதல்முறையாக போலீசாகிறார் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’!
சென்னை : கன்னப் படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சிம்ரன்.
1990ல் தமிழில் முன்னணி நாயகர்களின் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த போதே இவர், தீபக் என்பவரை மணந்து குடும்பத்தலைவி ஆனார்.
திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்ரன், பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.
திரிஷா இல்லனா நயன்தாரா...
தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் திரிஷா இல்லனா நயன்தாரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்கவும் சிம்ரன் முடிவு செய்துள்ளார்.
அலோன்...
இந்நிலையில், கன்னடப் படமொன்றில் நடிக்கவும் சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அலோன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சிம்ரன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம்.
முதன்முறையாக...
முன்னதாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிம்ரன் நடித்திருந்தாலும், அவர் முதன்முதலாக போலீஸ் வேடம் ஏற்று நடிக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மெய்சிலிர்த்துப் போனேன்...
இது தொடர்பாக சிம்ரன் கூறுகையில், ‘இந்த படத்தின் கதையையும், எனது கதாபாத்திரத்தையும் கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன். பொதுவாக நான் ஆக்ஷன் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆகையால், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.