Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
காக்கிச் சட்டை போட்டு திருடர்களை பந்தாடப் போகும் சிம்ரன்
சென்னை: இந்தியில் வெளியான மர்தாணி படத்தில் ராணி முகர்ஜி எப்படி தில்லான போலீஸ் அதிகாரியாக வந்தாரோ அதே போன்று சிம்ரனும் புதிய படம் ஒன்றில் காக்கிச் சட்டை அணிந்து நடிக்க உள்ளார்.
திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்ட சிம்ரன் மீண்டும் நடிக்கத் துவங்கினார். தன்னைத் தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.
அவர் கடைசியாக த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிம்ரன்
குட்டி குட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அவரின் ஆசையை அவரது கணவர் தீபக் நிறைவேற்றி வைக்க உள்ளார்.
புதிய படம்
சிம்ரன் நடிக்கும் புதிய படத்தை விளம்பரப் படங்கள் எடுத்து வரும் கௌரி ஷங்கர் இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா பட இயக்குனர் ஆகிறார்.
போலீஸ் அதிகாரி
சிம்ரன் தயாரித்து நடிக்கும் இந்த படத்தில் அவர் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இந்தியில் ராணி முகர்ஜி நடிப்பில் மர்தாணி படம் வெளியானது. அந்த படத்தில் ராணி தில்லான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சிம்ரனும் தனது படத்தில் ராணி போன்று பயமறியா போலீஸ் அதிகாரியாக வருவாராம்.
வில்லன்
சிம்ரனுக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிம்ரன் கையால் அடி வாங்கப் போகும் அந்த வில்லன் யாரோ?