சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக இருந்தவர் சிம்ரன். நான் எல்லாம் சிம்ரன் இடுப்பை மட்டும் 3 மணிநேரம் பார்ப்பேன் என்று சத்யன் மாயாவி படத்தில் ஜோதிகாவிடம் கூறி கடுப்பேற்றுவார். இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் சிம்ரன்.
கிளாமர் காட்டி நடித்த அவருக்கு நடிப்பும் நன்றாகவே வரும். பிற நாயகிகள் போன்று அவரும் திருமணமாகி, குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். பின்னர் எந்த சூர்யாவின் முதல் நாயகியாக நடித்தாரோ அதே சூர்யாவுக்கு அம்மாவாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் நடிக்கிறார்.
முதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்த சிம்ரன் தற்போது இளம் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். இதனால் சிம்ரனுடன் நடித்துவிட மாட்டோமா என்று நினைத்த இளம் ஹீரோக்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











