twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் சிம்ரன் ஜீன்ஸ், குர்தா, அதே சிக் உடல், சிரிக்கும் கண்கள், சிலிர்க்கும் இடை என படு க்யூட்டாக மீண்டும் சென்னையில் லேண்ட்ஆகியுள்ளார் சிம்ரன். கல்யாணம் கட்டிக் கொண்டு கணவருடன் டெல்லியில் செட்டிலாகி விட்ட சிம்ரன் அழகான குழந்தைக்கும் சமீபத்தில்அம்மாவானார். மீண்டும் வருவேன், காத்திருங்கள் என்று சொல்லி விட்டுப் போனதால், சிம்ரன் எப்போ வருவார், சிலிர்க்கும்நடனத்தை எப்போ தருவார் என்று கோலிவுட்டில் சிலர் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை சிம்ரன் மீண்டும் நடிக்கப் போவது குறித்து எந்த அறிகுறியையும் காணோம். இந்த நிலையில் சிம்ரன் மீண்டும்சென்னைக்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் பான்யன் தொண்டு நிறுவனத்திற்காக பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ளநேற்று இன்று நாளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடவிருக்கிறார் சிம்ரன். அதற்காகவே சென்னை வந்துள்ளார். அட்டகாசமான ஜீன்ஸ், லூஸ் பிட்டிங் ஜிப்பா, கண் கண்ணாடி, அதே பழைய புன்சிரிப்பு என அப்படியே பழைய சிம்ரனாக வந்துஇறங்கியுள்ளார் இந்த கெஞ்சும் இடுப்புக்காரி! கூடவே ஊட்டுக்காரர் தீபக். நேற்று இன்று நாளை நிகழ்ச்சிக்கான பாட்டு ரிகர்சல் நடக்கும் அரங்கத்திற்குள் சிம்ரன் நுழைந்தவுடன் டான்ஸ் மாஸ்டர்கள்கலாவும், பிருந்தாவும் ஓஓஓ என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடி வந்து சிம்ரனைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். கூடவேஅத்தனை டான்ஸ் பெண்களும் ஓடி வந்து சிம்ரனிடம் நலம் விசாரித்தனர். குட்டிப் பாப்பா எப்படி இருக்கு என்று கேட்கவும்தவறவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் சிறிது நேரம் சிம்ரனும், மற்றவர்களும் பாச மழையில் நனைந்தனர். அப்புறம் டான்ஸ்ரிகர்சலுக்குப் போனார் சிம்ரன். தளபதியில் இடம் பெற்ற ராக்கம்மா கையைத் தட்டு பாட்டுக்குத் தான் சிம்ரன் டான்ஸ் ஆடப்போகிறார். ஆடி முடித்துக் களைத்துத் திரும்பிய சிம்ரனிடம் ஒரு ஹலோ சொல்லி பேச்சைத் தொடங்கினோம். சென்னைக்குத் திரும்பிவந்தது குறித்து விலாவாரியாக பேசினார் சிம்ஸ். மீண்டும் இங்கு வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நான் வேலை பார்த்த இடம் இது என்பதால் சந்தோஷத்தை விவரிக்கமுடியவில்லை. இது ஒரு நல்லெண்ண நிகழ்ச்சி என்பதால் தட்டாமல் வந்து விட்டேன். மீண்டும் டான்ஸ் ஆடுவதில் எந்த சிரமமும் இல்லை. உடலை நான் நன்றாகவே வைத்திருப்பதால், ஆடுவதில் பிரச்சினை இல்லை.எனவே மேடையில் ஆடுவதில் சிரமம் இருக்காது. மீண்டும் நடிக்க வருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நல்ல கதை, நல்ல படமாக இருந்தால், கணவரின்ஆலோசனைப்படி முடிவெடுப்பேன். நடிப்பதில் சிரமம் இருக்காது, எனக்குள் இன்னும் அதே பழைய சிம்ரன் தான் இருக்கிறார்.சிலர் என்னிடம் கதையுடன் அணுகினர், ஆனால் நல்ல கதையாக நான் எதிர்பார்க்கிறேன். இப்போது ஒரு குழந்தைக்குஅம்மாவாச்சே, அந்த கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் கதை இருக்க வேண்டும் இல்லியா? தமிழ்நாட்டில் மட்டும் தான் எனக்கு ரசிகர்கள் என்று இல்லை. நாங்கள் குடியிருக்கும் டெல்லியில் ஏராளமான தமிழர்கள்இருக்கிறார்கள். நான் மார்க்கெட்டுக்கோ, கடைக்கோ போனால் உடனே சூழ்ந்து கொண்டு நலம் விசாரிப்பார்கள். எனக்கு ரொம்பமகிழ்ச்சியான விஷயம் இது. சென்னையை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். குறிப்பாக சரவணபவன் இட்லி. அய்யோ, அதற்கு ஈடு இணையே கிடையாதுபோங்க. டெல்லியில் கூட சரவண பவன் இருக்கிறது. ஆனால் அது எனது வீட்டுக்கு ரொம்ப தூரமாக உள்ளது. எனவே அடிக்கடிபோக முடியவில்லை. லேட்டஸ்டாக சந்திரமுகி பார்த்தேன். ஜோதிகாவின் நடிப்பு அபாரம், எப்போதாவது தான் இது மாதிரியான ரோல் கிடைக்கும்.பின்னி எடுத்துள்ளார். நான் கூட இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது. டான்ஸ் நிகழ்ச்சிக்காக வந்துள்ள சிம்ரன், கூடிய விரைவில் நடிக்கவும் சென்னைக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

    By Staff
    |
    ஜீன்ஸ், குர்தா, அதே சிக் உடல், சிரிக்கும் கண்கள், சிலிர்க்கும் இடை என படு க்யூட்டாக மீண்டும் சென்னையில் லேண்ட்ஆகியுள்ளார் சிம்ரன்.

    கல்யாணம் கட்டிக் கொண்டு கணவருடன் டெல்லியில் செட்டிலாகி விட்ட சிம்ரன் அழகான குழந்தைக்கும் சமீபத்தில்அம்மாவானார். மீண்டும் வருவேன், காத்திருங்கள் என்று சொல்லி விட்டுப் போனதால், சிம்ரன் எப்போ வருவார், சிலிர்க்கும்நடனத்தை எப்போ தருவார் என்று கோலிவுட்டில் சிலர் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

    ஆனால் இதுவரை சிம்ரன் மீண்டும் நடிக்கப் போவது குறித்து எந்த அறிகுறியையும் காணோம். இந்த நிலையில் சிம்ரன் மீண்டும்சென்னைக்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் அவர் சென்னைக்கு வந்துள்ளார்.

    சென்னையில் பான்யன் தொண்டு நிறுவனத்திற்காக பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ளநேற்று இன்று நாளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடவிருக்கிறார் சிம்ரன். அதற்காகவே சென்னை வந்துள்ளார்.

    அட்டகாசமான ஜீன்ஸ், லூஸ் பிட்டிங் ஜிப்பா, கண் கண்ணாடி, அதே பழைய புன்சிரிப்பு என அப்படியே பழைய சிம்ரனாக வந்துஇறங்கியுள்ளார் இந்த கெஞ்சும் இடுப்புக்காரி! கூடவே ஊட்டுக்காரர் தீபக்.

    நேற்று இன்று நாளை நிகழ்ச்சிக்கான பாட்டு ரிகர்சல் நடக்கும் அரங்கத்திற்குள் சிம்ரன் நுழைந்தவுடன் டான்ஸ் மாஸ்டர்கள்கலாவும், பிருந்தாவும் ஓஓஓ என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடி வந்து சிம்ரனைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர். கூடவேஅத்தனை டான்ஸ் பெண்களும் ஓடி வந்து சிம்ரனிடம் நலம் விசாரித்தனர். குட்டிப் பாப்பா எப்படி இருக்கு என்று கேட்கவும்தவறவில்லை.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததால் சிறிது நேரம் சிம்ரனும், மற்றவர்களும் பாச மழையில் நனைந்தனர். அப்புறம் டான்ஸ்ரிகர்சலுக்குப் போனார் சிம்ரன். தளபதியில் இடம் பெற்ற ராக்கம்மா கையைத் தட்டு பாட்டுக்குத் தான் சிம்ரன் டான்ஸ் ஆடப்போகிறார்.

    ஆடி முடித்துக் களைத்துத் திரும்பிய சிம்ரனிடம் ஒரு ஹலோ சொல்லி பேச்சைத் தொடங்கினோம். சென்னைக்குத் திரும்பிவந்தது குறித்து விலாவாரியாக பேசினார் சிம்ஸ்.

    மீண்டும் இங்கு வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நான் வேலை பார்த்த இடம் இது என்பதால் சந்தோஷத்தை விவரிக்கமுடியவில்லை. இது ஒரு நல்லெண்ண நிகழ்ச்சி என்பதால் தட்டாமல் வந்து விட்டேன்.

    மீண்டும் டான்ஸ் ஆடுவதில் எந்த சிரமமும் இல்லை. உடலை நான் நன்றாகவே வைத்திருப்பதால், ஆடுவதில் பிரச்சினை இல்லை.எனவே மேடையில் ஆடுவதில் சிரமம் இருக்காது.

    மீண்டும் நடிக்க வருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நல்ல கதை, நல்ல படமாக இருந்தால், கணவரின்ஆலோசனைப்படி முடிவெடுப்பேன். நடிப்பதில் சிரமம் இருக்காது, எனக்குள் இன்னும் அதே பழைய சிம்ரன் தான் இருக்கிறார்.சிலர் என்னிடம் கதையுடன் அணுகினர், ஆனால் நல்ல கதையாக நான் எதிர்பார்க்கிறேன். இப்போது ஒரு குழந்தைக்குஅம்மாவாச்சே, அந்த கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் கதை இருக்க வேண்டும் இல்லியா?

    தமிழ்நாட்டில் மட்டும் தான் எனக்கு ரசிகர்கள் என்று இல்லை. நாங்கள் குடியிருக்கும் டெல்லியில் ஏராளமான தமிழர்கள்இருக்கிறார்கள். நான் மார்க்கெட்டுக்கோ, கடைக்கோ போனால் உடனே சூழ்ந்து கொண்டு நலம் விசாரிப்பார்கள். எனக்கு ரொம்பமகிழ்ச்சியான விஷயம் இது.

    சென்னையை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன். குறிப்பாக சரவணபவன் இட்லி. அய்யோ, அதற்கு ஈடு இணையே கிடையாதுபோங்க. டெல்லியில் கூட சரவண பவன் இருக்கிறது. ஆனால் அது எனது வீட்டுக்கு ரொம்ப தூரமாக உள்ளது. எனவே அடிக்கடிபோக முடியவில்லை.

    லேட்டஸ்டாக சந்திரமுகி பார்த்தேன். ஜோதிகாவின் நடிப்பு அபாரம், எப்போதாவது தான் இது மாதிரியான ரோல் கிடைக்கும்.பின்னி எடுத்துள்ளார். நான் கூட இவ்வளவு அருமையாக செய்திருக்க முடியாது.

    டான்ஸ் நிகழ்ச்சிக்காக வந்துள்ள சிம்ரன், கூடிய விரைவில் நடிக்கவும் சென்னைக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

      Read more about: simran in chennai
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X