Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ராசக்காபாளையம் சிந்து துலானி!
சிந்து துலானி, மேகா நாயர் ஆகிய இரு பெரும் கும் நாயகிகள் இணைந்து கலக்கும் பசுபதி மே/பா ராசக்காபாளையம் என்ற சூப்பர் படம் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தை சிலமுறை பரீட்சித்து கையை சுட்டுக் கொண்டவர் சிந்து துலானி. முன்னழகும், பின்னழகும் சிறப்புற அமைந்தும் கூட தமிழ் சினிமாவால் கைவிடப்பட்டவர் சிந்து துலானி.கவர்சிப் பந்தாக மாறியும், கிளாமர் கில்லாடியாக திறமை காட்டியும் தன்னை கோலிவுட் கவனிக்காமல் விட்டதால் பெரும் விசனத்தில் இருப்பவர் சிந்து துலானி. இருந்தும் மனம் உடையாமல் மீண்டும் மீண்டும் தமிழிலேயே வாய்ப்புகள் தேடி வருபவர்.
அப்படிப்பட்டவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பசுபதி மூலம் வந்துள்ளது. ரஞ்சித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சிந்து துலானி. இன்னொரு ஜோடியாக வருகிறார் மேகா நாயர்.
மெத்தென்று மெதுவடை சிந்து துலானி என்றால், ஜிலேபி கெண்டை மீன் போல வாகானவர் மேகா நாயர். மலையாளத்து ஜிலீர் சிப்ஸ் மேகா நாயருக்கு தமிழில் இது முதல் படம். ஆனால் அவரது கேரியரில் இது இரண்டாவது படம்.
ஏற்கனவே தெலுங்கில் ஆதி என்ற படத்தில் அதிரடியாக கிளாமர் காட்டி அசத்தியுள்ளர் மேகா. அதைக் கேள்விப்பட்டுத்தான் ராசக்காபாளையத்திற்கு அவரைக் கூட்டி வந்து கும்மியடிக்க விட்டுள்ளனர்.
இரு பெரும் கிளாமர் ராணிகள் படத்தில் இருந்தாலும் கிளாமரை விட தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம் இது. நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகராக ஆகிய படங்களை விஜய்யை வைத்து இயக்கிய செல்வபாரதிதான் இப்படத்தையும் இயக்குகிறார்.
கிளாமர் கிள்ளுகிறதா, தாய்மை வெல்லுகிறதா என்பது படம் வந்தால்தான் தெரியும்.