twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிந்தூரிக்கு வந்த சிக்கல்! பாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.பாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.ஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.இதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.சிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார், சரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் கையெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.சிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    By Staff
    |

    பாய்ஸ் படத்திற்குப் பிறகு காணாமல் போன சிந்தூரி, ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    பாய்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் சிந்தூரி. அந்தப் படத்தில் ஹரிணிக்கே (இப்போ ஜெனிலியா) அதிகமுக்கியத்துவம்கொடுக்கப்பட்டதால் சிந்தூரி சிதறிப் போனார். இருந்தாலும் ஷங்கர் படமாயிற்றே, எப்படியாவது வாய்ப்புவந்து விடும் என்ற நம்பிக்கையில் படத்தை முடித்தார்.

    ஆனால் அவரது துரதிர்ஷ்டம், பாய்ஸ் வெளியாகி ஷங்கரையே சிதறடித்து விட்டதால் சிந்தூரி ரொம்பவே விசனமாகிப்போனார். இந்த நிலையில் தான் அவரைத் தேடி ஃப்ளவர்ஸ் வாய்ப்பு வந்தது.

    இதைப் பயன்படுத்தி எப்படியாவது கோலிவுட்டில் துண்டைப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வத்துடன் மிகுந்த"ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்.

    படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் போய் சுட்டுத் தள்ள யூனிட்டார் முடிவு செய்தார்கள். வெளிநாட்டுக்குபோவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி விசாவுக்கு அப்ளை செய்தனர்.

    சிந்தூரியிடமும் பாஸ்போர்ட் கேட்டுள்ளனர். ஆனால் அம்மணியோ, இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என்று காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வேளை பார்ட்டியிடம் பாஸ்போர்ட்டே இல்லையோ என்ற குழப்பமடைந்த யூனிட்டார்,

    சரி புதுசா வேண்டுமானால் விண்ணப்பித்து விடலாம், இதில் கையெழுத்தை மட்டும் போடுங்கள் என்று விண்ணப்பத்தைநீட்டியுள்ளனர். அதில் கையெழுத்து போடாத சிந்தூரி, அதற்குப் பிறகு தான் ஒரு உ ண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

    எனக்கு பாஸ்போர்ட் உள்ளது. ஆனால் அதுஎன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டவர்களுக்கு முதலில் ஒன்றும்புரியவில்லை. பிறகு அவரே தொடர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்து விட்டார்கள் என்றுமுணகியிருக்கிறார்.

    சிந்தூரின் பதிலால் ஷாக் ஆகிப் போன யூனிட்டார், எதற்காக பாஸ்போர்ட்டை முடக்கினார்கள். அதை ஏன் இவ்வளவுரகசியமாக வைத்துள்ளார் சிந்தூரி. வேறு ஏதாவது விவகாரமா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கடைசியாகவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

      Read more about: sindhuri gets new chance
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X