Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜிம்மிலேயே கிடந்து உடல் இளைத்த இஞ்சி இடுப்பழகி!
சென்னை : 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக அதிகப்படுத்தினார்.
ஆனால், அதையடுத்து பாகுபலி-2 படத்திற்காக அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் குண்டான அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பை தொடங்கினர்.
ஆனால் அதையடுத்து அவரைத்தேடி சில புதிய படவாய்ப்புகள் வந்தபோது அவர் ஏற்கவில்லை. 'எனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மான பிறகுதான் இனிமேல் புதிய படங்களில் கமிட் ஆவேன்' எனச் சொல்லிவந்தார் அனுஷ்கா.
வீட்டிலேயே ஜிம்
அதைத் தொடர்ந்து, ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிற்குள்ளேயே ஒரு அதிநவீன உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்கிய அனுஷ்கா, ஒரு பயிற்சியாளர் மூலமாக தினமும் எட்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார்.
செம ஸ்லிம்
இதுபோல கடுமையாக செய்து வந்த உடற்பயிற்சி தற்போது பலன் கொடுத்துள்ளதாம். பல மாதங்களாக செய்த உடற்பயிற்சியின் பலனாக தற்போது அவர் ஸ்லிம்மாகி விட்டார்.
அடடே நீங்களா
அதையடுத்து சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வந்தபோது, அனுஷ்காவின் ரசிகர்களும், நண்பர்களும் அவரது ஸ்லிம் ரகசியத்தைக் கேட்டறிந்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.
தெலுங்கு டைரக்டரை கூப்பிட்டு
இந்தநிலையில், உடல் எடையைக் குறைத்த பிறகுதான் புதிய படங்களில் கையெழுத்திடுவேன் என்பதில் உறுதியாக இருந்துவந்த அனுஷ்கா, தற்போது தன்னிடம் கதை சொல்லிக் காத்திருந்த ஒரு தெலுங்கு டைரக்டரை அழைத்து அந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.