முதலில் ஷூட்டிங்... அப்புறம்தான் ஹனிமூன்! - சினேகா முடிவு
ஆனால் திருமணம் முடிந்த பிறகும் தனியாக இருக்க வேண்டிய நிலை பிரசன்னாவுக்கு. திருமணத்துக்கு முன்பே ஒப்புக் கொண்ட படமான ஹரிதாஸில் நடிக்கப் போய்விட்டார் சினேகா.
இரவு பகலாக ஷூட்டிங் (இந்தப் படத்தில் நடிக்கப் போனதால்தான் கோச்சடையானைக் கூட இழந்தார் சினேகா!).
8 வயது சிறுவனை தீயவர்களிடமிருந்து ஒரு தந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக்கொண்ட படம் இது. சினேகாவுக்கு லைப்டைம் ரோல் எனும் அளவுக்கு சிறப்பான வேடமாம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் ஹனிமூன் என்று சினேகாவும் பிரசன்னாவும் முடிவு செய்துள்ளார்களாம்.
திருமணத்துக்குப் பிறகும், நிறைய பேர் சினேகாவுக்கு கதை சொல்ல வருகிறார்களாம். அவர்களிடம் ஒரு மூன்று மாதம் கழித்து கேட்கிறேனே! என்று கூறி அனுப்புகிறாராம் சினேகா!
ஹரிதாஸுக்குப் பிறகு, தன் கணவரை மட்டும் கவனித்துக் கொள்ளப் போகிறாரா... அல்லது கலைச் சேவையை தொடரப் போகிறாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?


Click it and Unblock the Notifications












