Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிவகார்த்திகேயன் - நயன்தாராவுடன் இணையும் சிநேகா!
கல்யாணமாகி குழந்தை பெற்றபின் முதல் முறையாக நடிக்க வந்துள்ளார் 'புன்னகை இளவரசி' சினேகா. சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கிறார்.
ஏற்கெனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பெரிய டீம் படத்தில் இருக்கிறது.
"கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போலத்தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும்... மனதில் அந்த வேடத்தை உள் வாங்கினால் மட்டுமே, அந்த கதாப்பாத்திரத்தை கன கட்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்கக் கூடிய ஒரு நடிகை தான் சிநேகா.
இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும் போதே இந்த கதாப்பாத்திரத்தில் சிநேகாதான் நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்... சிநேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டார்... எங்களின் ஒட்டுமொத்த படக் குழுவினரின் சார்பிலும் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்...வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்க இருக்கிறோம்...," என்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.
"சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு மிகப் பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்... ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்ச கட்டமாக இருக்கிறது... இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மோகன் ராஜாவுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்," என்றார் சிநேகா.