இப்படி செய்யலாமா நீங்கள்?.. சர்ச்சையில் சிக்கிய சினேகா - பிரசன்னா.. வெளுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: நடிகை சினேகா கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் புன்னகை அரசி என்று ரசிகர்களால் புகழப்பட்டவர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சினேகாவுக்குத்தான் இந்தப் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் GOAT படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதற்கு அடுத்தபடியாக பெரிதாக எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை.
நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். இதனால் குறுகிய காலத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார் சினேகா. அழகான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்கு வரிசையான வாய்ப்புகளை கொடுத்தன.
முன்னணி நடிகையான சினேகா: தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சினேகா சரியாக பயன்படுத்திக்கொண்டார். நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகை என்பதாலும் அவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்தது. தமிழில் எப்படி தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டாரோ அதேபோல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடிக்க செய்திருக்கிறார்.
புன்னகை அரசி: சினேகாவின் ப்ளஸ் பாயிண்ட்டாக ரசிகர்கள் பார்த்தது அவரது சிரிப்பை. அதன் காரணமாக அவரை புன்னகை அரசி என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசி என்ற பட்டம் சினேகாவுக்குத்தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எப்படி பிஸியாக இருந்தாரோ அதேபோன்று விளம்பர படங்களிலும் பிஸியாகவே இருந்தார் சினேகா. அதன் காரணமாக சீரியல்களுக்கு இடையே வரும் விளம்பர இடைவேளைகளிலும் சினேகா அனைத்து வீடுகளுக்குள்ளும் சேர்ந்தார்.

பிரசன்னாவுடன் திருமணம்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்தபோது பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதல் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.
ரீ என்ட்ரி கொடுத்த சினேகா: திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா விஜய் நடிப்பில் GOAT படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் சினேகாவின் நடிப்புக்கும் நல்லபடியான ரெஸ்பான்ஸே கிடைத்தது. அதற்உ பிறகு அவர் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் அவரும் அவரது கணவர் சினேகாவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.
என்ன சர்ச்சை?: அதாவது சில நாட்களுக்கு முன்னதாக சினேகாவும் பிரசன்னாவும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது அவர்கள் ரசிகர்களுடன் ஃபோட்டோக்களும் எடுத்துக்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கிரிவல பாதையில் நடந்து சென்றார்கள். ஆனால் அந்த சமயத்தில் சினேகா காலில் செருப்பு அணிந்தபடி நடந்து சென்றார். அந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நெட்டிசன்ஸ் புனிதமான கிரிவல பாதையில் செருப்பு காலோடு எப்படி செல்லலாம்; உடனடியாக அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











