Don't Miss!
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாக்ரவி சிக்கல்: மாற்றத்திற்கு மலையாளம் பத்திரிகைச் செய்திகளால் ஏற்பட்ட மன அழுத்தம் என படாத பாடு பட்டு வரும் ஸ்னேகா, ஒரு மாற்றத்திற்காக மலையாளத்திரையுலகம் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களால் ஸ்னேகா என்று அறியப்படும் சுஹாசினி, மலையாள ரசிகர்களுக்கு மட்டும் மானசா. இந்தப்பெயரில் தான் அவர் திரையுலகுக்கே அறிமுகமானார். அவரது முதல் படமே மலையாளப் படம் தான். அப்புறம் தான் விரும்புகிறேனில் புக் ஆனார் ஸ்னேகா. அவரது முதல் படத்தின்பெயர் இங்கனே ஒரு நிலாபக்ஷி இது ஒரு தோல்விப் படம். இதனால் எடுபடாமல் போன ஸ்னேகா, சோர்ந்திருந்த நேரத்தில் தான் விரும்புகிறேன் வாய்ப்பு வந்தது. அதன் பிறகு நடந்ததுவரலாறு! இப்போது கதைக்கு வருவோம். தமிழில் ஸ்னேகாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. புதுப்பேட்டை வந்தால் தான் ஸ்னேகாவின் எதிர்காலம்எந்தப்பாதையில் போகும் என்று தெரிய வரும். தெலுங்கிலும் அவர் பீல்டு அவுட். இதற்கிடையில் நாக்ரவி புண்ணியத்தால்உருவான எக்குத்தப்பு குளறுபடிகள். இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் ஸ்னேகா. இந்த டென்ஷனிலிருந்து விடுபட இப்போது மலையாளப் படத்தில்நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்னேகா. மம்முட்டியுடன் ஒரு புதுப் படத்தில் நடிக்கப் போகிறார் ஸ்னேகா. துருப்பு குள்ளன் என்று அப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க விருந்ததுபத்மப்பிரியா தான். ஆனால் தற்போது பட்டியல் படத்தில் அவர் கமிட் ஆகி விட்டதால், கால்ஷீட் இல்லையே என்றுகைவிரித்துள்ளார். ஏற்கனவே மம்முட்டியுடன், பத்மப்பிரியா நடித்து வருவது தெரிந்ததே! இதனால் அவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புஸ்னேகாவுக்கு வந்து சேர்ந்தது. நல்ல சமயத்தில் ஒரு பிரேக் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்ட ஸ்னேகா சரியென்று ஒத்துக்கொண்டு டேட்ஸ் கொடுத்து விட்டார். சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு புத்துணர்வுடன் கேரளாவுக்குக் கிளம்புகிறார் ஸ்னேகா. அங்கு கிடைக்கும் புது அனுபவத்துடன்மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ளாராம் ஸ்னேகா. ஆல் தி பெஸ்ட்!
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களால் ஸ்னேகா என்று அறியப்படும் சுஹாசினி, மலையாள ரசிகர்களுக்கு மட்டும் மானசா. இந்தப்பெயரில் தான் அவர் திரையுலகுக்கே அறிமுகமானார்.
அவரது முதல் படமே மலையாளப் படம் தான். அப்புறம் தான் விரும்புகிறேனில் புக் ஆனார் ஸ்னேகா. அவரது முதல் படத்தின்பெயர் இங்கனே ஒரு நிலாபக்ஷி இது ஒரு தோல்விப் படம்.
தமிழில் ஸ்னேகாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. புதுப்பேட்டை வந்தால் தான் ஸ்னேகாவின் எதிர்காலம்எந்தப்பாதையில் போகும் என்று தெரிய வரும். தெலுங்கிலும் அவர் பீல்டு அவுட். இதற்கிடையில் நாக்ரவி புண்ணியத்தால்உருவான எக்குத்தப்பு குளறுபடிகள்.
இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் ஸ்னேகா. இந்த டென்ஷனிலிருந்து விடுபட இப்போது மலையாளப் படத்தில்நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்னேகா. மம்முட்டியுடன் ஒரு புதுப் படத்தில் நடிக்கப் போகிறார் ஸ்னேகா.
ஏற்கனவே மம்முட்டியுடன், பத்மப்பிரியா நடித்து வருவது தெரிந்ததே! இதனால் அவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புஸ்னேகாவுக்கு வந்து சேர்ந்தது. நல்ல சமயத்தில் ஒரு பிரேக் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்ட ஸ்னேகா சரியென்று ஒத்துக்கொண்டு டேட்ஸ் கொடுத்து விட்டார்.
சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு புத்துணர்வுடன் கேரளாவுக்குக் கிளம்புகிறார் ஸ்னேகா. அங்கு கிடைக்கும் புது அனுபவத்துடன்மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ளாராம் ஸ்னேகா. ஆல் தி பெஸ்ட்!