twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்திரமுகி ஸ்னேகா சந்திரமுகியாக ஸ்னேகா நடித்திருந்தால்.. இது சும்மா கற்பனை அல்ல, ஜோதிகா செய்த சந்திரமுகி கேரக்டரை முதலில்செய்ய தேர்வானது ஸ்னேகா தானாம். எப்படி?சந்திரமுகியில் ஹீரோ, ஹீரோயின், கதை எல்லாமே ஜோதிகா தான். அந்தப் படத்தில் நடித்த ரஜினி உள்ளிட்ட எல்லாகேரக்டர்களையும் ஓரம்கட்டியது ஜோவின் கேரக்டர். மிக பவர்ஃபுல்லான, இன்னும் பேசப்படும் நடிப்பு அது.ஆனால், சந்திரமுகி கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் சிம்ரன்தான். பொன்னான அந்த வாய்ப்பை கர்ப்பமாக இருந்ததால்ஜஸ்ட் மிஸ்ஸாக நழுவ விட்டார் சிம்ரன் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. இதையடுத்து யாரைப் போடலாம் என்று பி.வாசு யோசித்த போது, அவரது நினைவில் வந்தது ஸ்னேகா தானாம். இதற்கு ரஜினியும்ஒத்துக் கொண்டு விட்டாராம். ஆனால் கடைசி நேரத்தில் ஜோவை இறுதி செய்து விட்டார்கள்.சந்திரமுகியின் கேரக்டருக்கு நல்ல பெரிய கண்கள் இருக்க வேண்டும் என்று ஃபீல் செய்தோம். பெரிய கண்கள் கொண்டநாயகிகள் யார் என்று பார்த்தபோது ஜோதிகாவும், ஸ்னேகாவும் நினைவுக்கு வந்தனர். எனக்கு ஸ்னேகாவை ரொம்பப்பிடித்திருந்தது.சரி, அவரை போட்டு விடலாம் என முடிவானபோது, அவரது கண்கள் மிரட்டும் வகையில் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் ஜோதிகாவின் கண்கள் அட்சரம் பிசகாத சந்திரமுகி கண்களாக தோன்றியது. இதையடுத்து ஸ்னேகாவுக்குப் பதில்ஜோதிகாவை போட்டோம். இந்த விஷயம் ஸ்னேகாவுக்குக் கூடத் தெரியாது என்றார் வாசு.ஒரு பொது விழாவில் இந்தத் தகவலை வாசு வெளியிட அங்கு வந்திருந்த ஸ்னேகா ரொம்ப அதிர்ந்து, நொந்து போய் விட்டார்.ஸ்னேகாவின் கண்கள் மீது சந்தேகம் வந்தது ஏன் என்று மேலும் விளக்கிய வாசு, கடந்த ஆண்டு அது என்ற படம் ஒன்று வந்தது.அதில் குருட்டுப் பெண்ணாக நடித்திருந்தார் ஸ்னேகா. பின்னர் அவருக்குப் பார்வை வரும். ஆனால் அவரால் பேய்களையும்பார்க்க முடியும். அந்தப் படத்தில் ஸ்னேகா நடித்ததற்கு அவரது பெரிய கண்கள்தான் காரணம். ஆனால் அதே பெரிய கண்கள்தான் சந்திரமுகியில்நடிக்க இடையூறாகப் போய் விட்டது. அதாவது வாசு எதிர்பார்த்தது உருண்டையான, பெரிய கண்களாம்.ஆனால் ஸ்னேகாவின் கண்கள் பெரிதாகவும், நீளமாகவும் இருந்ததால், உருண்டைக் கண்ணழகி ஜோவை போட்டார்களாம்.ஆனா சிம்ரன் கண்ணுதான் ரொம்ப சிறுசாச்சே, அப்புறம் எதுக்கு சிம்ரனை முதலில் போட்டாகளாம்?அவருக்கு இருந்த மார்க்கெட் தான் காரணம்.. வேற என்ன?

    By Staff
    |
    சந்திரமுகியாக ஸ்னேகா நடித்திருந்தால்.. இது சும்மா கற்பனை அல்ல, ஜோதிகா செய்த சந்திரமுகி கேரக்டரை முதலில்செய்ய தேர்வானது ஸ்னேகா தானாம். எப்படி?

    சந்திரமுகியில் ஹீரோ, ஹீரோயின், கதை எல்லாமே ஜோதிகா தான். அந்தப் படத்தில் நடித்த ரஜினி உள்ளிட்ட எல்லாகேரக்டர்களையும் ஓரம்கட்டியது ஜோவின் கேரக்டர். மிக பவர்ஃபுல்லான, இன்னும் பேசப்படும் நடிப்பு அது.

    ஆனால், சந்திரமுகி கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வானவர் சிம்ரன்தான். பொன்னான அந்த வாய்ப்பை கர்ப்பமாக இருந்ததால்ஜஸ்ட் மிஸ்ஸாக நழுவ விட்டார் சிம்ரன் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே.

    இதையடுத்து யாரைப் போடலாம் என்று பி.வாசு யோசித்த போது, அவரது நினைவில் வந்தது ஸ்னேகா தானாம். இதற்கு ரஜினியும்ஒத்துக் கொண்டு விட்டாராம். ஆனால் கடைசி நேரத்தில் ஜோவை இறுதி செய்து விட்டார்கள்.

    சந்திரமுகியின் கேரக்டருக்கு நல்ல பெரிய கண்கள் இருக்க வேண்டும் என்று ஃபீல் செய்தோம். பெரிய கண்கள் கொண்டநாயகிகள் யார் என்று பார்த்தபோது ஜோதிகாவும், ஸ்னேகாவும் நினைவுக்கு வந்தனர். எனக்கு ஸ்னேகாவை ரொம்பப்பிடித்திருந்தது.

    சரி, அவரை போட்டு விடலாம் என முடிவானபோது, அவரது கண்கள் மிரட்டும் வகையில் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

    ஆனால் ஜோதிகாவின் கண்கள் அட்சரம் பிசகாத சந்திரமுகி கண்களாக தோன்றியது. இதையடுத்து ஸ்னேகாவுக்குப் பதில்ஜோதிகாவை போட்டோம். இந்த விஷயம் ஸ்னேகாவுக்குக் கூடத் தெரியாது என்றார் வாசு.

    ஒரு பொது விழாவில் இந்தத் தகவலை வாசு வெளியிட அங்கு வந்திருந்த ஸ்னேகா ரொம்ப அதிர்ந்து, நொந்து போய் விட்டார்.

    ஸ்னேகாவின் கண்கள் மீது சந்தேகம் வந்தது ஏன் என்று மேலும் விளக்கிய வாசு, கடந்த ஆண்டு அது என்ற படம் ஒன்று வந்தது.அதில் குருட்டுப் பெண்ணாக நடித்திருந்தார் ஸ்னேகா. பின்னர் அவருக்குப் பார்வை வரும். ஆனால் அவரால் பேய்களையும்பார்க்க முடியும்.

    அந்தப் படத்தில் ஸ்னேகா நடித்ததற்கு அவரது பெரிய கண்கள்தான் காரணம். ஆனால் அதே பெரிய கண்கள்தான் சந்திரமுகியில்நடிக்க இடையூறாகப் போய் விட்டது. அதாவது வாசு எதிர்பார்த்தது உருண்டையான, பெரிய கண்களாம்.

    ஆனால் ஸ்னேகாவின் கண்கள் பெரிதாகவும், நீளமாகவும் இருந்ததால், உருண்டைக் கண்ணழகி ஜோவை போட்டார்களாம்.

    ஆனா சிம்ரன் கண்ணுதான் ரொம்ப சிறுசாச்சே, அப்புறம் எதுக்கு சிம்ரனை முதலில் போட்டாகளாம்?

    அவருக்கு இருந்த மார்க்கெட் தான் காரணம்.. வேற என்ன?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X