ஸ்னேகாவின் ரகசியம் சமீபத்தில் ஸ்னேகா மிக ரகசியமாக வெளிநாட்டுக்குப் போய் வந்திருக்கிறார். வழக்கமாக தனது அண்ணன் குடும்பத்தினரைசந்திக்க அவர் அடிக்கடி துபாய்க்கு பறப்பது வாடிக்கை தான் என்றாலும் இம்முறை ஐரோப்பா பக்கமாய் போய் வந்திருக்கிறார்.இதில் எதுக்கு ரகசியம் என்கிறீர்களா?. எல்லாம் உடம்பு விஷயம் தான். ஓவராக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.தனது உடலில் ஆங்காங்கே தங்கிவிட்ட சதையைக் குறைத்துக் கொண்டு ட்ரிம் ஆவதற்காகப் போய் வந்தாராம் ஸ்னேகா.உடற் பயிற்சியோடு கூடிய சிறிய அளவிலான லிபோ சக்ஷன் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு படு கிச்சாக ஊருக்குத் திரும்பிவந்திருக்கிறார்.வெளிநாடு போய் வருவதற்கு எல்லாம் ஸ்னேகாவுக்கு நேரம் இருக்கிறதா என்றால். ஆமாம், ரொம்பவே நேரம் இருக்கிறது.காரணம், கையில் படங்கள் ஏதும் இல்லாததும், இருக்கும் படத்தின் சூட்டிங்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று போய்க்கொண்டிருப்பதும் தான்.தனுஷ்-சோனியா அகர்வால் நடிக்கும் புதுப்பேட்டை படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார் ஸ்னேகா. இதில் அவருக்குபாலியல் தொழிலாளி வேடம். இந்தப் படம் இப்போது அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணத்தைஇயக்குனர் செல்வராகவன் மட்டுமே அறிவார் என்கிறார்கள்.கதையில் சில மாறுதல்கள் செய்ய நினைத்து அந்த வேலைகளில் இருக்கிறாராம் செல்வா. இதனால் தான் சூட்டிங் ஸ்டாப்என்கிறார்கள்.இதற்கிடையே இவர் நடித்து முடித்துவிட்ட ஏபிசிடி படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதே போல ஸ்னேகாவும் காத்திருக்கிறார்.எதற்கு? சம்பளத்துக்குத் தான். படத்தில் இவருக்கு ஏகத்துக்கும் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்களாம்.பாக்கி சம்பளத்தை வாங்கித் தரச் சொல்லி சங்கத்தில் லெட்டர் கொடுத்திருக்கிறாராம். சம்பள பாக்கி என்பது ஸ்னேகாவுக்குபுதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோகிராப்பிலும் இவருக்கு சம்பளத்தை பாக்கி வைத்துவிட அதையும் கவுன்சிலுக்குக்கொண்டு போனார்.இப்போது அடுத்த படத்திலும் ஊதிய சிக்கல். இதனால் கடுப்பில் இருக்கும் ஸ்னேகா பேசாமல் மீண்டும் ஆந்திரா பக்கமேகவனத்தை செலுத்தலாமா என்ற மூடில் இருக்கிறாராம். அங்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுப்பது மட்டுமல்ல, நன்றாகஒத்துழைத்து நடித்தால் பேசியதை விட அதிகமாகவே தருகிறார்களாம்.இதற்கிடையே மலையாளத்தில் இருந்தும் ஸ்னேகாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில் நடிக்கத்ரிஷாவையும் ஸ்னேகாவையும் கேட்டார்களாம். அதில் நடிக்க த்ரிஷா கேட்ட சம்பளத்தில் 3 மலையாள படம் எடுத்துவிடலாம்என்பதால் ஸ்னேகாவையே நடிக்க வைக்க விரும்புகிறார்களாம்.சொற்ப ஊதியம் என்பதால் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா.இன்னொரு விஷயம் தெரியுமோ ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசியுள்ள ஸ்னேகா, புதுப்பேட்டையிலும் தனதுவாய்ஸையே தர முடிவு செய்துள்ளாராம்.

By Staff

சமீபத்தில் ஸ்னேகா மிக ரகசியமாக வெளிநாட்டுக்குப் போய் வந்திருக்கிறார். வழக்கமாக தனது அண்ணன் குடும்பத்தினரைசந்திக்க அவர் அடிக்கடி துபாய்க்கு பறப்பது வாடிக்கை தான் என்றாலும் இம்முறை ஐரோப்பா பக்கமாய் போய் வந்திருக்கிறார்.

இதில் எதுக்கு ரகசியம் என்கிறீர்களா?. எல்லாம் உடம்பு விஷயம் தான். ஓவராக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.தனது உடலில் ஆங்காங்கே தங்கிவிட்ட சதையைக் குறைத்துக் கொண்டு ட்ரிம் ஆவதற்காகப் போய் வந்தாராம் ஸ்னேகா.

உடற் பயிற்சியோடு கூடிய சிறிய அளவிலான லிபோ சக்ஷன் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு படு கிச்சாக ஊருக்குத் திரும்பிவந்திருக்கிறார்.


வெளிநாடு போய் வருவதற்கு எல்லாம் ஸ்னேகாவுக்கு நேரம் இருக்கிறதா என்றால். ஆமாம், ரொம்பவே நேரம் இருக்கிறது.காரணம், கையில் படங்கள் ஏதும் இல்லாததும், இருக்கும் படத்தின் சூட்டிங்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று போய்க்கொண்டிருப்பதும் தான்.

தனுஷ்-சோனியா அகர்வால் நடிக்கும் புதுப்பேட்டை படத்தின் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார் ஸ்னேகா. இதில் அவருக்குபாலியல் தொழிலாளி வேடம். இந்தப் படம் இப்போது அப்படியே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணத்தைஇயக்குனர் செல்வராகவன் மட்டுமே அறிவார் என்கிறார்கள்.

கதையில் சில மாறுதல்கள் செய்ய நினைத்து அந்த வேலைகளில் இருக்கிறாராம் செல்வா. இதனால் தான் சூட்டிங் ஸ்டாப்என்கிறார்கள்.


இதற்கிடையே இவர் நடித்து முடித்துவிட்ட ஏபிசிடி படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதே போல ஸ்னேகாவும் காத்திருக்கிறார்.எதற்கு? சம்பளத்துக்குத் தான். படத்தில் இவருக்கு ஏகத்துக்கும் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்களாம்.

பாக்கி சம்பளத்தை வாங்கித் தரச் சொல்லி சங்கத்தில் லெட்டர் கொடுத்திருக்கிறாராம். சம்பள பாக்கி என்பது ஸ்னேகாவுக்குபுதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோகிராப்பிலும் இவருக்கு சம்பளத்தை பாக்கி வைத்துவிட அதையும் கவுன்சிலுக்குக்கொண்டு போனார்.

இப்போது அடுத்த படத்திலும் ஊதிய சிக்கல். இதனால் கடுப்பில் இருக்கும் ஸ்னேகா பேசாமல் மீண்டும் ஆந்திரா பக்கமேகவனத்தை செலுத்தலாமா என்ற மூடில் இருக்கிறாராம். அங்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுப்பது மட்டுமல்ல, நன்றாகஒத்துழைத்து நடித்தால் பேசியதை விட அதிகமாகவே தருகிறார்களாம்.


இதற்கிடையே மலையாளத்தில் இருந்தும் ஸ்னேகாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில் நடிக்கத்ரிஷாவையும் ஸ்னேகாவையும் கேட்டார்களாம். அதில் நடிக்க த்ரிஷா கேட்ட சம்பளத்தில் 3 மலையாள படம் எடுத்துவிடலாம்என்பதால் ஸ்னேகாவையே நடிக்க வைக்க விரும்புகிறார்களாம்.

சொற்ப ஊதியம் என்பதால் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா.

இன்னொரு விஷயம் தெரியுமோ ஏபிசிடி படத்தில் சொந்தக் குரலில் பேசியுள்ள ஸ்னேகா, புதுப்பேட்டையிலும் தனதுவாய்ஸையே தர முடிவு செய்துள்ளாராம்.

Read more about: sneha is trim now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X