என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு சோலோ பாட்டு!
கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு தனிப் பாடல் தந்துள்ளாராம் இயக்குநர் கவுதம் மேனன்.
அஜீத் - அனுஷ்கா, விவேக் நடிக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் நீண்டு கொண்டே போகிறது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் த்ரிஷா தனியாகப் பாடும் பாடல் காட்சியை படமாக்கப் போகிறார் கவுதம் மேனன். இந்தப் பாடல் காட்சியில் பங்கேற்பதற்கான ஒத்திகையில் சமீபத்தில் பங்கேற்றார் த்ரிஷா. இதனை ஒரு செல்ஃபி படமாக எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

"என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இதில் இடம் பெறும் சோலோ பாடலுக்காக என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்றும் தெரிவித்துள்ளார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications












