Don't Miss!
- News தேர்தலை ரத்து பண்ணுங்க.. 2 கட்சியிலும் பணம் விளையாடுது.. அதிர வைத்த அதிமுக.. புதுச்சேரியில் பரபர!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Finance ஐடி ஊழியர்களை விட அதிகம்.. அனுஷ்கா சர்மா பாடிகார்டின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா!
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு!
சென்னை: தன்னிடம் சிலர் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றதாக கூறி விஜய் பட நடிகை பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
நடிகை நித்யா மேனன் கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் நூற்றென்பது படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்து விட்டார்.
காஞ்சனா 2 படத்தில் லாரன்ஸுடனும் மெர்சல் படத்தில் விஜயுடனும் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
ரியல் சிங்கப்பெண் இவர்தான்.. தீபிகா படுகோனின் 'சபக்' டிரைலர் ரிலீஸ்!
தி அயன்லேடி
மிஷன் மங்கள் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் நடிகை நித்யா மேனன். தற்போது முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார்.
நித்யா மேனன்
இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நித்யா மேனன், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
சினிமா துறை மட்டுமல்ல
தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனது பேட்டியில் தெரிவித்தார். அவர் பேசியதாவது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் பெண்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
தவறாக நடக்க முயன்றனர்
என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. ஆனால் சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று எச்சரித்தேன்.
துணிச்சல்தான்
என்ன தவறு நடந்தாலும் அதை துணிந்து எதிர்க்க வேண்டும். நாம் எதிர்த்தால்தான் மற்றவர்களும் பிரச்சனையில் தலையிடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பே அவர்களின் துணிச்சல்தான் என்று கூறினார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ஆனால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் யார் என்பது குறித்து நித்யா மேனன் வாய்திறக்கவில்லை.
தனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக நடிகை நித்யாமேனன் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.