Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு
மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். இவ்வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது. போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார்.
பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.
மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இதனால் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருகட்டத்தில், போலீசார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் சோனாவை சமரசமாக போகும்படி நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிபி சரணுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தினால் கைது செய்து உள்ளே அடைத்துவிடுவோம் என போலீஸ் சோனாவை பகிரங்கமாக மிரட்டியது.
இதனால், அடுத்த நாளே சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார் என்றும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சோனாவே அறிவித்தார். எஸ்ப்பி சரண் எதுவும் கூறவில்லை.
நடந்த சம்பவங்கள் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிவந்தார் சோனா. உடனடியாக வெளிநாடு போய், பின்னர் ஹைதராபாத்தில் தங்கி நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது இப்போதைய முடிவு குறித்து சோனா கூறுகையில், "எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதை எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன. ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.
அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன்.
வேண்டாம் வெங்கட்பிரபு படம்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்றார்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!