Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எனக்கு பாய் பிரண்ட் ஜாஸ்தி, நான் எப்படி ஆண்களை கேவலமாகப் பேசுவேன்...சோனா
கவர்ச்சி நடிகை சோனா அளித்த ஒரு பேட்டியில் ஆண்கள் எல்லாம் டிஷூ பேப்பர் போன்றவர்கள் என்றும் பல்வேறு விதமாக விமர்சித்தும் கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு ஆண்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து சோனாவின் ஆபீஸ், வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு விட்டார்கள்.
இந்த நிலையில் தான் அப்படியெல்லாம் பேசவில்லை என்று சோனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆண்களைத் தவறாகப் பேசவில்லை. நான் சொல்லாததையெல்லாம் பேசியதாக கூறி தவறாக செய்தி போட்டுள்ளனர்.
எனக்கு 99 சதவீத நண்பர்கள் ஆண்கள்தான். அப்படி இருக்கும்போது நான் எப்படி ஆண்களைக் கேவலப்படுத்திப் பேச முடியும். எனக்கு ஆண்கள் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு.
அதேசமயம், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வருவது உண்மைதான். அது எனது தனிப்பட்ட விஷயம், அதை யாரும் கேட்க முடியாது என்றார் சோனா.
பரவாயில்லை, எப்படிப் பேசினாலும் பப்ளிசிட்டிதானே...!