twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோனியாவின் மிரட்டல்! கண்ணாலத்திற்கு கண்ணாடிக் காதலரின் சம்மதத்தை வாங்க நூதன வழியைமேற்கொண்டுள்ளார் சோனியா அகர்வால்.நடித்த முதல் படத்திலேயே செல்வராகவனுடன் காதல் கொண்ட சோனியா அகர்வால்அதன் பின்னர் அதிக படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். காதலை டெவலப் செய்வதில் ஆர்வம் கொண்டார். வந்த வாய்ப்புகளையும்வேண்டாம் என்று நிராகரித்து வந்தார்.காதலரின் அனுமதியோடு ஒரு சில வெளிப் படங்களில் மட்டுமே தலை காட்டினார்.இதனால், நடிக்க வந்து இத்தனை காலம் ஆகியும் விரல் விட்டு எண்ணும் அளவிலானபடங்களிலேயே நடித்துள்ளார் சோனியா.செல்வராகவனும், சோனியாவும் எப்போது கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்றகேள்வி எழும்போதெல்லாம் இருவரும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி சமாளித்துவந்தனர்.இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையிலும்,செல்வராகவனின் இழுத்தடிப்பு மற்றும் கடுப்படிப்பு காரணமாக நொந்து நூலாகிநூடூல்ஸ் ஆகி வருகிறார் சோனியா.இடையில் சோனியாவை கல்யாணம் செய்து கொள்வதாக செல்வராகவன் ஓ.கேசொல்லி விடவே, நடிக்க ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து சோனியா விலகினார்.ஆனால் செல்வா மீண்டும் ஜகா வாங்கவே கடுப்பாகிப் போனார் சோனியா.இந் நிலையில் நடப்பது நடக்கட்டும் என்று திருட்டுப் பயலே படத்தில் இதுவரைஇல்லாத அளவுக்கு சூப்பர் கிளாமர் காட்டி நடித்தார் சோனியா.டூ பீஸ் உடையில் எல்லாம் வந்து குதியாட்டம் போட்டார்.சோனியாவின் கவர்ச்சி களியாட்டம் செல்வராகவனின் வீட்டினரைஎரிச்சலாக்கியுள்ளதாம்.அதிர்ந்து போன அவர்கள், என்னம்மா இப்படிப் பண்ணிப்புட்டே என்று சோனியாவைகூப்பிட்டுக் கேட்க, உங்க பையன் தெளிவான பதில் தர்ற வரை நான் எனக்குதோணுகிற மாதிரி நடிக்கப் போறேன்.அவரை விரைவில் உருப்படியான பதிலை சொல்லச் சொல்லுங்கள் என்று கடுப்பானபதிலைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம் சோனியா.

    By Staff
    |

    கண்ணாலத்திற்கு கண்ணாடிக் காதலரின் சம்மதத்தை வாங்க நூதன வழியைமேற்கொண்டுள்ளார் சோனியா அகர்வால்.

    நடித்த முதல் படத்திலேயே செல்வராகவனுடன் காதல் கொண்ட சோனியா அகர்வால்அதன் பின்னர் அதிக படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார்.

    காதலை டெவலப் செய்வதில் ஆர்வம் கொண்டார். வந்த வாய்ப்புகளையும்வேண்டாம் என்று நிராகரித்து வந்தார்.

    காதலரின் அனுமதியோடு ஒரு சில வெளிப் படங்களில் மட்டுமே தலை காட்டினார்.இதனால், நடிக்க வந்து இத்தனை காலம் ஆகியும் விரல் விட்டு எண்ணும் அளவிலானபடங்களிலேயே நடித்துள்ளார் சோனியா.

    செல்வராகவனும், சோனியாவும் எப்போது கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்றகேள்வி எழும்போதெல்லாம் இருவரும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி சமாளித்துவந்தனர்.


    இரு வீட்டாரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையிலும்,செல்வராகவனின் இழுத்தடிப்பு மற்றும் கடுப்படிப்பு காரணமாக நொந்து நூலாகிநூடூல்ஸ் ஆகி வருகிறார் சோனியா.

    இடையில் சோனியாவை கல்யாணம் செய்து கொள்வதாக செல்வராகவன் ஓ.கேசொல்லி விடவே, நடிக்க ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து சோனியா விலகினார்.

    ஆனால் செல்வா மீண்டும் ஜகா வாங்கவே கடுப்பாகிப் போனார் சோனியா.

    இந் நிலையில் நடப்பது நடக்கட்டும் என்று திருட்டுப் பயலே படத்தில் இதுவரைஇல்லாத அளவுக்கு சூப்பர் கிளாமர் காட்டி நடித்தார் சோனியா.

    டூ பீஸ் உடையில் எல்லாம் வந்து குதியாட்டம் போட்டார்.

    சோனியாவின் கவர்ச்சி களியாட்டம் செல்வராகவனின் வீட்டினரைஎரிச்சலாக்கியுள்ளதாம்.


    அதிர்ந்து போன அவர்கள், என்னம்மா இப்படிப் பண்ணிப்புட்டே என்று சோனியாவைகூப்பிட்டுக் கேட்க, உங்க பையன் தெளிவான பதில் தர்ற வரை நான் எனக்குதோணுகிற மாதிரி நடிக்கப் போறேன்.

    அவரை விரைவில் உருப்படியான பதிலை சொல்லச் சொல்லுங்கள் என்று கடுப்பானபதிலைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாராம் சோனியா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X