Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாய் பிரண்டுக்கு விபத்து... தாத்தா மரணம்.. நமீதாவை அடுத்தடுத்து தாக்கிய சோகம்!
சென்னை: பாய் பிரண்டுக்கு விபத்து, தாத்தா மரணம் என அடுத்தடுத்து தாக்கிய சோகங்களால், சொந்த ஊரான சூரத்துக்குக் கிளம்பிப் போயிருக்கிறார் நடிகை நமீதா.
மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வரவேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சியில் இறங்கி, உடம்பைக் குறைத்து வந்தார் நமீதா.
கடை திறப்பு போன்ற கமர்ஷியல் நிகழ்ச்சிகளில் கூட அவ்வளவாகக் கலந்து கொள்ளாமலிருந்த அவருக்கு சமீபத்தில் அடுத்தடுத்து சோகங்கள் தாக்கின.
நமீதாவின் நெருங்கிய நண்பரும் பிஸினஸ் பார்ட்னருமான கபூர் மும்பை விபத்தில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட நாற்பது தையல்கள் போடப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நேரத்தில் நமீதாவின் அன்புக்குரிய தாத்தா வசந்த் நேற்று சூரத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. நமீதாவிடம் ரொம்பப் பாசமாக இருப்பாராம் இந்த தாத்தா.
ஏற்கெனவே வருத்தத்திலிருந்தவரை, இந்த சோகம் பெரிதாகத் தாக்க, சூரத்துக்குப் பறந்திருக்கிறார் நமீதா.