Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஜய்யின் வில்லனுக்கு ஜோடியாகும் பாவனா... பாலிவுட்டில் கால் பதிக்கிறார்!
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார்.
சென்னை : தென்னிந்திய நடிகை பாவனா ராவ் பாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
'கொல கொலயா முந்திரிக்கா', 'விண்மீன்கள்', 'வனயுத்தம்' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டில் வெளியான 'சத்ய ஹரிஷ்சந்திரா ' என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த 'வில்லன்' என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் இந்தியில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
முதல் பாலிவுட் படம்
இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் 'பை பாஸ் ரோடு ' என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இவர் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தியில் நடிக்க ஆசை
இது குறித்து பாவனா ராவ் பேசுகையில்,‘ கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது இயக்குநர் நமன் நிதீஷ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
கதை பிடித்திருந்தது
இதன் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போதே இதில் நடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏனெனில் திரைக்கதையில் எனக்கு வலுவான கேரக்டர். கதைப்படிசொகுசாக வாழ விரும்பும் பெண். அதற்காக சில குறுக்கு வழிகளிலும் சவாலுடன் பயணிக்க விரும்புவாள்.
படப்பிடிப்பு தொடங்கிவிட்டது
இந்த படத்தின் படபிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் அடுத்தக்கட்ட படபிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்குகிறது.இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆரம்பமாகியிருக்கிறது. முதன்முதலாக ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைக்கிறேன். அங்கும் எனக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்." என்றார்.
பரதநாட்டிய கலைஞர்
அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது இரண்டு முன்னணி நடிகர்களின் கன்னட படங்களில் நடிக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் புகழ் பெற்றது போல், ஹிந்தியிலும் வெற்றிப் பெறுவார் என்கிறார்கள் இவரது ரசிகர்கள்.
விஜய்யின் வில்லன்
இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் நீல் நிதீன் முகேஷ், விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பதுடன், பாகுபலி படப்புகழ் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.