Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சிக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்தனர்.
திருமணம் செய்துகொள்ளலாமே
தற்போது, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டு பேரும் ஏன்? திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு ஒரு பதிவினை போட்டு உள்ளார்.
உங்களுக்கு ஆள் இருக்கா ?
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நன்றாக தான் இருக்கும். ஆனால், எனக்கு இப்போ ஆள் இருக்கே என கூறியுள்ளார். சிம்புவை கல்யாணம் பண்ணிக்க இருக்கும் ஆசையை நைசா கூறியுள்ளார் ஸ்ரீநிதி. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பெரிய நடிகர்கள் பற்றி பேசினால், பிரபலமாகிவிடலாம் என்பதால் ஸ்ரீநிதி இப்படி பேசி வருகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். ஸ்ரீநிதியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.