Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அழைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இத சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சிக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்தனர்.

திருமணம் செய்துகொள்ளலாமே
தற்போது, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டு பேரும் ஏன்? திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு ஒரு பதிவினை போட்டு உள்ளார்.

உங்களுக்கு ஆள் இருக்கா ?
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நன்றாக தான் இருக்கும். ஆனால், எனக்கு இப்போ ஆள் இருக்கே என கூறியுள்ளார். சிம்புவை கல்யாணம் பண்ணிக்க இருக்கும் ஆசையை நைசா கூறியுள்ளார் ஸ்ரீநிதி. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பெரிய நடிகர்கள் பற்றி பேசினால், பிரபலமாகிவிடலாம் என்பதால் ஸ்ரீநிதி இப்படி பேசி வருகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். ஸ்ரீநிதியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.