Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி.. ஆனால்.. ஆசையை நைசா சொன்ன சீரியல் நடிகை !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என கூறியுள்ளது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சிக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீதொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறியுள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்தனர்.
திருமணம் செய்துகொள்ளலாமே
தற்போது, ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், நீங்கள் இரண்டு பேரும் ஏன்? திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு ஒரு பதிவினை போட்டு உள்ளார்.
உங்களுக்கு ஆள் இருக்கா ?
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நன்றாக தான் இருக்கும். ஆனால், எனக்கு இப்போ ஆள் இருக்கே என கூறியுள்ளார். சிம்புவை கல்யாணம் பண்ணிக்க இருக்கும் ஆசையை நைசா கூறியுள்ளார் ஸ்ரீநிதி. இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் பெரிய நடிகர்கள் பற்றி பேசினால், பிரபலமாகிவிடலாம் என்பதால் ஸ்ரீநிதி இப்படி பேசி வருகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். ஸ்ரீநிதியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.